Sunday, January 10, 2010

படித்தவை [பிடித்தவை]-1

1.சீக்கிரம் வந்துவிட்ட தந்தை
  அரைப்பரீட்சையில் தேராத
  மதிப்பெண் அட்டையுடன் நான்.

2.எப்படி சொல்வது
தனிக்குடித்தனம் போவதை
உடம்பு சரியில்லையாவென கேட்கும் தாய்......

3.இரவு நீண்டுகொண்டே
இருக்கிறது, கையில்
கொடுக்கவிருக்கும் காதல் கடிதம்.

4.பிச்சைக் காரர்
அருவருப்பு, வெட்கம்
துறந்த ஒருவகைத்
துறவிகள்.

5.மருத்துவர்
கண்ணுக்குத் தெரிந்த
கடவுள்கள் - வழக்கம்போல்
காசு வாங்கிக் கொண்டு.

6.கனவு
சேகரிக்க மறந்த
சம்பவங்களின்
தொகுப்பு.

7.விவாதம்
முடிவுகளைத்
திணிக்க முயலும்
அமைதிப் போராட்டம்.

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!