Friday, December 31, 2010

HAPPY NEW YEAR 2011

                    இந்த வருடத்தில் எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் "JUST LIKE THAT,IT HAPPENS" அப்படின்னு கடக்க எனக்கு எல்லா விதத்திலும் உதவிய,எனக்கு பிடித்த நண்பர்களை பற்றிய பதிவு. இதே மாதிரி இன்னும் எத்தனை வருடம் வேணாலும்  என்கூட  இருப்பாங்கன்னு எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இது கவுன்ட் டௌன் கிடையாது.  எல்லாத்தையும் பத்தி எழுதலாம்னு ஒரு நினைப்பு. இப்ப தான் அதுக்கு நேரம் வந்து இருக்கு.

என் பால்ய கால நண்பர்கள்:
இடமிருந்து வலம் : சிராஜ்,பரணி,சரவணன்,பரணி,யுவராஜ்,மோகன்,அப்பு                                                             

                         இந்த செட்டுக்கு ஐயா தான் கேங் லீடர்.  எல்லாரும் என்னை விட சின்ன பசங்க. எப்ப என்ன பிரச்சனை வந்தாலும் கொஞ்சம் கூட அதை பெருசு பண்ணாம அப்படியே அந்த பிரச்சனை கால்லையே  விழுந்து, அதுல இருந்து  ஜகா வாங்கிடுவாங்க. இப்ப அவங்க எல்லாம் படிக்கிறதுல [சாரி ப்பா தப்பா நினைச்சுகாதீங்க] பிஸி ஆ இருப்பதினால் வாரத்துக்கு ஒரு டைம் தான் பார்பேன். நடுவுல எதாவது பசங்க காலேஜ் கட் அடிட்சாங்கன்னா, மறக்காம என்னையும்  கூட சேர்த்திகுவாங்க. அப்படியே நாமளும் அன்னைக்கு மட்டும் காலேஜ் பையன் மாதிரி ஜாலி ஆ  இவனுக கூட சுத்திட்டு  இருப்பேன்.
                         எப்ப என்ன வேலைன்னாலும் வந்து முன்னாடி நிப்பானுங்க.அப்படி என்ன பெரிய வேலைன்னா "நான் என் காதலியை பார்த்து சைட் அடிக்க போகும் போது, அவளுக்காக காத்திருக்கும் வேளைகளில் வந்து எவ்ளோ நேரம் வேணாலும் வெயிட் பண்ணுவாங்க. பதிலுக்கு பெருசா ஒன்னும் செய்ய வேண்டியதில்லை. திருப்பி அவங்க ஆளுகள பார்க்கும் போது கூட போகணும்.
                        இப்ப எல்லோரடா நட்பு வட்டமும் பெருகியதில் இருந்து, அப்டியே முன்ன இருந்தா நெருக்கம் போய்டுச்சு, ஆனாலும் நட்பு மட்டும், பத்து  ரூபா இருந்தா கொடு டா தம் அடிக்கணும்க்ரதுல இருந்து பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பிகர் பார்த்தேன் மச்சிங்கறது வரைக்கும், பகிர்தல் இன்னும் அப்படியே தான் இருக்கு..ஒரு ஒருத்தனையும் பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன். நன்றி பசங்களா, இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....! 

என் அலுவலக சகாக்கள் மற்றும் எங்கள் பிக் பாஸ் 


நான்,கிரி,சதீஷ்,சுபாஷ்,தினகரன்,வெங்கட்,கார்த்திக்
(சிவப்பா [கலர்ல]இருக்கிறவங்க தான் எங்க பாஸ்)

                                                                            
                           நான் எவ்ளோ நாள் வேலைக்கு லீவ் போட்டாலும், என் வேலையும் சேர்த்தி பார்க்குற என் நண்பன் கிரி [என்னோட காலேஜ் கிளாஸ்மேட் தான்], என்ன தான் நான் வேலையில தப்பு பண்ணினாலும், என்னை விட்டு கொடுக்காத எங்க டீம் லீடர் சுபாஷ்[என்னோட காலேஜ் கிளாஸ்மேட் தான்], எங்க எல்லாத்தையும் CLIENT கிட்ட விட்டு கொடுக்காத எங்க பாஸ்,பாசமா  அண்ணா ன்னு கூப்பிடுரதுக்கு மூணு தம்பிக,
நான் வேலை பார்க்குற இடமும்,ரொம்ப நல்லா இருக்கும். ஒரு நாளும் வேலையில் டென்ஷன் ஆனதே இல்ல. [நீங்க சொல்றது கேக்குது வேலை செஞ்சா தான அது எல்லாம் வரும்]. ஒரு ஒருத்தரயும்  பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன்.Thanks Guys இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....! 

என் உடன் பிறவா சகோதரர்கள் பற்றி:


மதன், ஜூடு, பிரகாஷ், தியாகு

                              இதுல இருக்கிறவங்க எல்லாம் என்னை விட பெரியவங்க. நானும் எல்லாத்தையும் ரொம்ப மரியாதையா யோவ் பெருசுன்னு தான் கூப்பிடுவேன். நிறையா "நல்ல" விசயங்களை இவங்க கிட்ட இருந்து தான் பழகினேன். என்னோட பொருளாதார பற்றாக்குறைகளுக்கு எப்ப எவ்ளோ வேணாலும் உதவி பண்ணுவாங்க. எனக்கு சில சமயம் கோவம், கஷ்டம் வந்ததுன்னா, இவங்க கூட பேசி எல்லாத்தையும் அவங்க கிட்ட கொடுத்து விட்டு நான் நிம்மதி ஆகிடுவேன். அவங்களும் என்கிட்ட சின்ன பையன்னு எல்லாம் நினைக்காம எல்லா விசயத்தையும் ஷேர் பண்ணிக்குவாங்க..
ரொம்ப நல்ல அண்ணணுக...! ஒரு ஒருத்தரயும்  பத்தியும் நிறைய எழுதுறதுக்கு இருந்தாலும், இன்னொரு நாள் எழுதுறேன்.Thanks Guys இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....!

எனது பேனா தோழி - கவினா

pen_pal.jpg

                                   இவங்கள பார்த்து தான் நான் வலைபூ ஆரம்பிச்சேன். ஒரு வருசத்துக்கு முன்னாடி நான் [ எழுதின ]போட்ட மொக்கைல இருந்து இப்ப இந்த மொக்கை வரைக்கும் சலிக்காம படித்து விட்டு நல்லா இருக்கு டா ன்னு கமெண்ட் போடுற ஆளு.  இப்ப வரைக்கும் அவங்கள நான் பார்த்தது இல்ல. இனிமேலும் ஐடியா இல்ல. இந்த நட்பு ரொம்பவே நல்லா இருக்கு. இந்த வருசமும் உங்க கூட  எனக்கு ரொம்ப நல்லா தான் இருந்தது. கண்டிப்பா நம்புறேன் உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்ன்னு.....!

என் குடும்பம்:

                இது போலவே என் அப்பா,அம்மா, அண்ணன்,அண்ணன் பையன் எல்லோருமே என்கிட்ட நட்பா தான் இருப்பாங்க. யாருமே அவங்க போஸ்டிங் தகுந்த மாதிரி என்கிட்ட நடந்துக்க மாட்டாங்க. எங்க அப்பா "ஜாகிங் இவ்ளோ நாள் போகிற இல்ல" எத்தனை பிகர்அ  கரெக்ட் பண்றேன்னு கேக்குற ஆளு. உன் ஆள்ட நான் வேணா வந்து பேசட்டுமானு எங்க அம்மா கேப்பாங்க. அவ்ளோ பாசம். மம்மி,டாடி யே இப்படின்னா அண்ணனை பத்தி கேக்கவே வேண்டாம். ஆள் செம ஜாலி. ஆனா அப்பப்போ மொக்கை தான் போடுவான்.. சாரி போட்டோ தான் இல்ல. இன்னொரு நாள் காமிக்கிறேன்.

என் காதல்
love6.jpg&t=1
                        இந்த விசயத்தில மட்டும் தான் எனக்கு எழுதிக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் பெருசா நடக்கல. ஒரு வேளை இதிலயும் நான் ஜெயிச்சு இருந்தா, மேல சொன்ன அத்தனை மனிதர்கள் என் மேல வச்சு இருக்கிற பாசத்தை நான் மதிக்காம போய் இருக்கலாம், எல்லாம் நன்மைக்கே ன்னு இந்த விசயத்தையும் எடுத்துகிட்டேன்.

Happy_New_Year_2011_Wallpapers1.jpg

எழுதுறதுக்கு இன்னும் நிறைய பேரு இருக்கீங்க. மறந்து எழுதாமல் விட்ட நண்பர்கள் மன்னிக்கவும்.ஆனா எனக்கு கை வலிக்குது டைப் பண்ணி. என் இனிய அனைத்து நண்பகல் மற்றும் தோழிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்........................................! HAVE A GREAT YEAR 2011 .........!


டிஸ்கி: என் முதல் தம் அடிச்சு பழகினது என் பால்ய கால நண்பர்களோடு.!
              என் தொழில் பற்றிய அனுபவங்களை பழகியது என் அலுவலக நண்பர்களோடு .!
              என் வாழ்க்கை பற்றிய அனுபவங்களை பழகி கொண்டு இருப்பது என் அண்ணன்களோடு.!
              நான் வலைபூ ஆரம்பிச்சு எழுத பழகி ஒரு வருஷம் ஆச்சு. அதான் உங்கள வச்சு எழுதி பழகிக்குறேன்.........!     

Thursday, December 23, 2010

அனுபவ குறிப்புகள் - 3

மிட்டாய்க்காகவோ அல்லது பொம்மைக்காகவோ 
அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளையோ,
அவர்களை சமாதானபடுத்தும் அல்லது
அடிக்கும் பெற்றோர்களையோ , 

ரெட்டை சடையுடனும்,பையில் புத்தகத்துடனும்,
சைக்கிள் தள்ளி, வெட்க பார்வை வீசி
பள்ளி செல்லும்
பண்ணிரண்டாப்பு பிள்ளைகளையோ ............!

காதில் ஹெட்போன்,கையில் செல்போன்களுடனும் ,
குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே
கல்லூரி செல்லும்
சுடிதார்களையோ ...........!

வள் பார்த்துவிட்டால் என்று
சரக்கடிக்கும் நண்பர்களையோ,
இந்த பொண்ணுகளே இப்படி தான் என்று
சரக்கடிக்கும் நண்பர்களையோ.......!

காலையில் நடைபழகி,ஹிந்து படித்து   
மனைவியின் காலுக்கு தைலம் தடவி,
செவ்வாய்,வெள்ளிகளில் கோவில் செல்லும்,
ஓய்வு பெற்ற வயதான தம்பதிகளையோ.........!



மார்கழி மாத குளிர், நவம்பர் மாத மழை,
மழைநேர வானவில், கோடை வெப்பம்,
ஆடிமாத காற்று, போன்ற
இயற்கை கொடைகளை அனுபவிக்கும் போதோ  ........!

" குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா "
பாடும் குருட்டு பிச்சைகாரனை பார்க்கும் போதோ 
பொட்டல் காட்டின் நடுவே ஒற்றை பனைமரம்,
தண்ணியே இல்லாத குளங்களின் மணல் வெடிப்புகளையோ............!

ன்னும் நிறைய மனிதர்களையோ அல்லது
இயற்கை காட்சிகளையோ  பார்க்கும் போது
கவிதைக்கான கரு கிடைத்துவிடும் எனக்கு
கவிதை தான் கிடைக்காது எனக்கு ....................?

டிஸ்கி 1:  "கவிதை எழுத தெரியாதுங்கறத எப்படி எல்லாம் சொல்லுது பாரு இது" போன்ற பின்னுட்டங்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கபடுகிறது.
டிஸ்கி 2 : உங்களுக்கும் இந்த மாதிரியான நான் எழுதாமல் விட்ட "இனிமையான தருணங்கள்" எதாவது இருந்தால் பின்னுட்டத்தில்  தெரிவிக்கவும்.




Wednesday, November 24, 2010

சிகெரட் பிடிச்சா சில நல்ல விசயங்களும் இருக்குதுங்க!


எல்லாரும் சிகெரட் பிடிக்காத அது நிகோடின் இருக்குது... Cancer வரும் அது வரும் இது வரும் சொல்லுவாங்க. அது இருக்கட்டும் சிகெரட் பிடிக்கிறதால் சில நல்ல விசியங்களும் இருக்குங்க. என்னனு தெரிஞ்சிக ஆர்வமா இருக்கீங்களா படிச்சி தான் பாருங்களேன்.

இங்க நான் எனக்கு தெரிஞ்ச scientificaa prove பண்ணப்பட்ட 3 points மட்டும் சொல்லறேன்.
  1. உங்களுக்கு வயசே ஆகாது.
  2. உங்களுக்கு பெண் குழந்தையே பிறக்காது.
  3. உங்க வீட்டு பக்கம் திருடன் வரவே மாட்டன்.
என்ன? இதெல்லாம் நான் மட்டும் சொல்லலேங்க... Science கூட இததான் சொல்லுது. இத கேட்ட உடனே நீங்க சிகரெட் பிடிப்பவர இருந்த ரொம்ப சந்தோஷ படுவீங்க இல்லையா? சரி இதோட போயிராதீங்க! கொஞ்சம் கீழயும் படிங்க :)

முதல்ல , "உங்களுக்கு வயசே ஆகாது" - நீங்க சிகரெட் பிடிப்பவரா இருந்தா உங்களுக்கு வரக்கூடாத வியாதி எல்லாம் வந்து நீங்க சின்ன வயசுலயே பரலோகம் போயடுவேங்க. அதுக்கு அப்புறம் எங்கருந்து வயசறது.

ரெண்டாவதா, "உங்களுக்கு பெண் குழந்தையே பிறக்காது" நீங்க சிகரெட் பிடிப்பவர் என்றால் உங்கள் விந்துவில் குறை ஏற்பட்டு குழந்தையே பிறக்காதே பின்ன எங்க இருந்து பெண் குழந்தை?!

மூனாவதா, "உங்க வீட்டு பக்கம் திருடன் வரவே மாட்டன்" அதாவது சிகரெட் பிடிச்சா உங்களுக்கு இருமல் அடிக்கடி வரும். எப்போமே சத்தம் கேட்டகிற வீட்டுக்கு எந்த திருடனும் வர மாட்டேன்.

என்ன நான் சொல்லறது எல்லாம் சரி தானே?





இது மட்டும் இல்ல இன்னும் இதே மாதிரி நெறைய நல்ல விசியங்கள் சிகரெட் பிடிப்பதால் இருக்குது.

Friday, October 22, 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர், கீழேகிடக்கும் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.


"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி."

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம் 


இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

நான் படித்ததில் இருந்து - உங்கள் சிந்தனைக்கு.

Tuesday, September 28, 2010

Genius Tamil Student

இந்த மாதிரி எல்லாம் பதில் எழுதுறதுக்கு நம்ம பையன் எப்படி எல்லாம் யோசிச்சு இருப்பான். அப்பா நினைக்கவே பிரம்மாண்டமா இருக்கு. நிச்சயமா இவன் தமிழ் மாணவர்கள் சமுதயாதிற்க்கே பெருமை ஏற்படுத்தி உள்ளான்.







எப்புடி சிங்கம் ல. இவன் காலேஜ் போயி இன்னும் என்னல்லாம் பண்ண போறானோ......?

படங்கள் : தினகரன்.எங்க பாஸ்,அதுக்காக அந்த பையன் அவரான்னு கேக்க கூடாது.அட நம்புங்கப்பா நீங்களே கீழ பாருங்க

 இவங்கள பார்த்த இந்த மாதிரி எழுதுறவங்க மாதிரியா இருக்கு.........!

Tuesday, September 14, 2010

உலக நாயகனின் கவிதை

மனித வணக்கம்


தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீக சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்ச‌மங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!

மகளே. ஓ மகளே!
நீயும் என் காதலியே
எந்தம்மை போல..
எனைப்பிரி ந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத்
தேடுவாயா?

நண்பா, ஓ நண‌பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உன‌தம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சக‌வாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து,
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்,
ஆம்.
நாளை உன் வரியில்
நான் தெரிவேன்.

-கமல் ஹாசன்

நன்றி: விகடன் தீபாவளி மலர் - 2003

Monday, September 13, 2010

மத நல்லிணக்கம் [ட்விட்டியது]

இன்று முதல் கட்டிங் அடிப்பதை நிறுத்தி விட்டு ஷேவிங்[ஸ்] பண்ணலாம்ன்னு இருக்கேன்..! #போதையில் சொன்னது.

அரசு தொடக்க பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் பாதணி அணிவதில்லை.,தனியார் பள்ளி குழந்தைகள்........? #பாதசாரியின் பார்வை.

ரம்ஜான் விருந்து பீப் பிரியாணியில் பிள்ளையார் எறும்பு #மத நல்லிணக்கம்.!

பலரின் நிம்மதியை கெடுத்த வார்த்தைகள். "மச்சி அவ உன்ன பார்க்குறாடா" #அனுபவம் 





ஒரு வேளை என் காதலை ஆங்கிலத்தில் சொல்லாமல் தமிழில் சொல்லி இருந்தால் சம்மதித்திருப்பாளோ? #பீலிங்

விளம்பர,அறிவிப்பு பலகையில் 'ல'கர பிழைகளை காணும் போது உங்களுக்கும் கோவம் வருமா? நம்ம கண்ணுக்கு மட்டும் ஏன் இது தட்டுபடுதுன்னு..! #கேள்வி

லைட்டா அரிக்குது.... சொறிஞ்சுக்கிறேன்...... #உண்மையான ட்விட்டர் அக்கவுண்ட் ஹோல்டர்....

தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது. # தத்துவம்

இந்த மாதிரி ஒரு அம்மா இல்லையேன்னு யாரை பார்த்தும் நான் ஏங்கியதில்லை.இந்த மாதிரி ஒரு பிள்ளை இல்லையேன்னு எங்க அம்மாவும் ஏங்கியதில்லை#சீரியல்

காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்., பேலன்ஸ் இல்லாம கால் பண்ணுவேன்.,பெப்சி உமாவுக்கே போன் போட்டு மாஸ் பண்ணுவேன் டா #வ குவாட்டர் கட்டிங்

விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா செய்த விளம்பரம் செம ஹிட் .

Friday, September 10, 2010

அனுபவக் குறிப்பு

அழும் குழந்தையும் நானும் 
சில சமயம் மளிகை கடைகளில்,
சில்லறை  தட்டுப்பாடு
காரணமாக கிடைக்கும்
ஐம்பது பைசா மிட்டாய்களை,
எங்காவது தெருவோரங்களில்
எதற்காகவோ, காரணமே இல்லாமல்
அழும் குழந்தைக்கு
கொடுக்க நினைப்பேன்.


1874253879_cf2e15d475.jpg

அதற்குள்  எனக்குள் இருக்கும்
குழந்தை அழுது விடுவதால்
அதற்கே கொடுத்து விடுவேன்..!
சிறிது நேரத்தில் அழும்
அக்குழந்தைகளை  காணும் போது,
அழுகைக்கான காரணத்தை புரிந்தவனாய்,
அங்கிருந்து நகர்வேன்
கணிப்பொறியை நோக்கி
அனுபவக் குறிப்பு
டைப்புவதற்க்கு........!

வழக்கம் போல இப்பவே சொல்லிட்டேன் இது கவிதை கிடையாது.

Tuesday, September 7, 2010

கன்னி [TEEN - AGE] கவிதை

நினைவுகளால் ஆன என் நாட்குறிப்பு
வெறும் காகிதமாகிறது.........

உணர்வுகளால் ஆன என் இதயம்
வெறும் உறுப்பாகிறது...........

lonely-man.jpg

தாஜ்மாகலாய் தோன்றிய நம் பேருந்து நிறுத்தம்
வெறும் பேருந்து நிறுத்தம் ஆகிறது........

ஏனென்றால்

என்னவள் இல்லை.........?


ஆமா
ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க. அவள பார்க்க முடியாதில்லை அல்லவா.!

என்னோட 15 வயசுல எழுதின முதல் கவிதை.

கோடை விடுமுறையில் தலைவியின் பிரிவை தாங்க முடியாமல் தலைவன் (அது  நான்தானுங்க) எழுதியது. பள்ளி விடுமுறை முடிந்து அவளிடம் இதை காண்பித்தேன்.அதுக்கு அவ சொன்னா "இது எங்கயோ குடும்ப மலர்ல படிச்ச மாதிரியே இருக்குன்னு". அப்ப இருந்து இப்ப வரைக்கும் கவிதை எழுதுறது இல்ல .....................................................................  அவளுக்கு..!

பின் குறிப்பு: பேச்சாளர்களின் முதல் பேச்சை கன்னி பேச்சு என்பார்கள். அதை போல தான் எனது முதல் கவிதையும் கன்னி கவிதை. எப்புடி..?

Saturday, August 21, 2010

கவிப்பேரரசு


1. கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?
இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சிதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண்மூடிக்கொண்டவளும் நீதான்!

vairamuthu.jpg


2. சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.

Friday, August 20, 2010

ஓஷோ

மூச்சு திணறினாலும்…. இதமான சூட்டில்..

 
குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.
குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்தது. அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.
அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.
அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையைக் கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.
ஓஷோ சொல்கிறார்
இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.
ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு: உன்னை சாணத்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.
———————————————————————

Monday, August 16, 2010

போலீசும் நானும்

police.jpg

                என்னோட கல்லுரி காலத்துல என்னோட "பை" செலவுக்கு [பாக்கெட் மணி] கிடச்ச சின்ன சின்ன வேலை எல்லாம் நண்பர்களோட சேர்ந்து செய்த நாட்களில், மிகவும் கஷ்டப்பட்டு செய்த வேலை போஸ்டர் ஒட்டினது. கஷ்டபட்டதுக்கு காரணம் இத படிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கே புரியும். நாங்க ஒட்டின  சுவரொட்டி வேலை வாய்ப்பை பற்றியது.1000 போஸ்டர் ஓட்டினால் 1500 ரூபாய். நாங்க மூனு பேரு இந்த வேலைக்கு கமிட் ஆனோம்.

               1400 போஸ்டர் ஓட்டிட்டோம். கடைசி நூறு தான கிழிச்சு வீசிடலாம்ன்னு இரண்டு பேரு சொன்னோம்.ஒருத்தன் மட்டும் கடமை தவறாம அதையும் ஒட்டிடலாம்ன்னு சொன்னத கேட்டோம். மெயின் பஸ் ஸ்டாண்டுல ஓட்டினா இன்னும் நிறைய பணம் தருவாங்கன்னு அவன் பேச்ச கேட்டு அங்க போனோம் அதிகாலை 4 மணிக்கு.நாங்க வேலை செய்து கொண்டு இடுந்த போது அந்த அசம்பாவிதம் நடந்தது.

                 திடீர்ன்னு என் முதுகில் என்னமோ நெருட, திரும்பி பார்த்தா அனுமதி இல்லாம போஸ்டர் ஒட்டியதற்காக துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டோம்.நேராக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம்.எங்கள் மீது வழக்கு பதிவு செய்து இருந்தால்  கூட வெறும் 150 ரூபாய் அபாரதத்தோடு வெளிய வந்து இருப்போம். அத பண்ணாம என் கைபேசிய பிடுங்கி வச்சுகிட்டாரு.அந்த 600 ரூபாய் மொபைல் வாங்குறதுக்காக  அந்த காவலருக்கு 200 ரூபாய்க்கு mobile recharge  பண்ணி விட்டு,இன்னும் இரண்டு பேருக்கும் தலா 100 ரூபாய் பணம் கொடுக்க வேண்டியதா போச்சு.கடைசில அந்த மொபைல் எனக்கு தர்றதுக்கு அவங்களுக்கு ஒரு வாரம் ஆச்சு.இவ்ளோ கஷ்டபட்டது  என்னோட சிம்கார்ட்-ல இருக்கிற எண்களுக்காக தான்.

                 இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாங்க அந்த மாதிரி வேலை எல்லாம் செய்யாம இருந்தோம்.திருப்பி வேறு ஒரு நாள் அதே மூனு பேரும் புது வருட பிறப்பிற்கு தேவாலயத்திற்கு புறப்பட்டோம் இரு சக்கர வாகனத்தில்.அப்ப மணி 11 .45 PM.  எங்க நேரதுக்குன்னே, போக்குவரத்து காவலரிடம் வண்டியும்,சாவியுமா மாட்டினோம்.எவ்ளவோ போராடியும் தலைக்கு    நூறுன்னு மொத்தம் 300 ரூபாய் போச்சு. எந்த ரசீதும் இல்லாம அவருக்கு நாங்க புதுவருட காசு கொடுத்துட்டு வந்தோம். இதுல இருந்து என் மனசுல ரொம்ப நாளா ஒரு கேள்வி அறிச்சுகிட்டே இருக்கு.அது என்னன்னா



இந்த மாதிரி போலீஸ் எல்லாம் 50 ரூபாய் கொடுத்து சினிமால மட்டும் தான் பார்க்க முடியுமா? நிஜ வாழ்கையில் எல்லாம் என்னோட வாழ்கையில் பார்த்த மாதிரி தான் இருக்காங்க. இந்த அநியாத்தை தட்டி கேக்க யாருமே இல்லையா.?

Saturday, July 24, 2010

அனுபவக் குறிப்பு




நாயும் மனிதர்களும்
அதிகாலை நேரத்தில்
கடித்து விடுவாய் என்று நானும் ,
அடித்து விடுவேன் என்று நீயும் !
நினைக்க 
இறுதியில் இருவருமே
எதுவுமே செய்யாமல்
பயத்தோடு
விலகி செல்கிறோம்......
                                            
lostdog01.JPG

அது ஒண்ணுமில்லைங்க. காலைல ஜாகிங் போறப்ப ரொம்ப தொந்தரவு பண்ணுதுங்க..........

உங்களுக்கும் இது கண்டிப்பா நடந்து இருக்கும்.
இப்பவே சொல்லிட்டேன் இது கவிதை கிடையாது.

Thursday, June 3, 2010

படித்ததில் பிடித்தது

நானும் நீயும்
The-Couple-1.jpg
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்கு பின்னால்
நின்று கொண்டு இருப்பாய் நீ
உன் இனத்துக் கற்ப்புகரசிகளை சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோகியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ
நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லி கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ
எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்கு பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை 
நன்றி : ஜெயபாஸ்கரன் அவர்களின் கவிதை. (விகடனில் வெளிவந்தது).
பின் குறிப்பு :கவிதைக்கு மாற்று கருத்து இருப்பவர்கள் இருப்பின் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

கவனம்
  conductor_rupee_fan.jpg
 நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி..


நன்றி :  சே. சதாசிவம்  {விகடனில் வெளிவந்தது}

Thursday, May 27, 2010

ஓஷோ ஜோக்ஸ்

ஒஷோவிடமிருந்து நான் தெரிந்து கொள்வது என்பது புன்னகையோடு எதிர்கொள்ளப்படும் ஒரு மரணமென்பது நம் அறுபதாண்டுகால வாழ்க்கையைவிட அர்த்தச்செறிவுள்ளது. இனி ஓஷோ ஜோக்ஸ்

1.கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..

“ ஏய் சனியனே! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு”

’ஏம்மா’

”கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்”

”அப்பா மட்டும் விளையாடுறார்”

”அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்”


2.பிரிவுத்துயரில் வாடும் தன் காதலிக்கு காதலன் எழுதும் கடிதம்.

அன்பே பிரிவைப் பற்றி கவலைகொள்ளாதே.இது தற்காலிகமானது.இந்த உலகமே நம்மை எதிர்த்தாலும் சரி. அந்த வானமே இடிந்து விழுந்தாலும் சரி.அந்த கடலைகளே கரைதாண்டி வந்தாலும் சரி,நீயும் நானும் இணைவதை யாராலும் தடுக்க இயலாது.எவ்வளவு இடரையும் எதிர்த்து உன்னைக் கரம் பிடிப்பேன்.இது நம் தூய்மையான உறுதியான காதலின் மீது ஆணை.

இப்படிக்கு ஆயிரம் முத்தங்களுடன் உன் அன்புக்காதலன்.

பின் குறிப்பு : வரும் வெள்ளியன்று இடி,மின்னல்,மழை வராமல் இருந்தால் நிச்சயம் உன்னைச்சந்திக்கிறேன்.

3. பாதிரியார்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆசிரியர் :

”மாணவர்களே சுவர்க்கத்தைப் பற்றி நீங்கள் பிரசங்கிக்கும்போது உங்கள் முகம் பிரகாசமாக இருக்கட்டும்.உங்கள் கண்களானது நிறைந்த ஒளி கொள்ளட்டும்.உங்கள் குரல் மென்மையாக தெளிவாக ஒலிக்கட்டும். உங்களின் வார்த்தைகள் இனிக்கட்டும்.உங்கள் புன்னகைகள் மலர்ந்து மனம் வீசட்டும்.”

அப்போது திடீரென்று ஒரு மாணவன் எழுந்து “ நரகத்தைப் பற்றி பேசும்போது, என்ன செய்வது?”

ஆசிரியர், ”நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இப்படியே உங்கள் முகம் சாதாரணமாகயிருந்தால் போதுமானது”.

Tuesday, May 25, 2010

ஜோதிகா மாதிரி பெண்களை காதலிக்க வைக்க



ஒன்சென்காந்தள்,ஆம்பல்
அனிச்சம்,தன்கையகுவளை
குறிச்சி,வெட்சி
செங்கோடுவேரி,தேமா
மணிட்சிகை,உரிதுநூறு
அவிழ்தொத்து,உந்தூள்
கூவிளம்,வடவனம்
வாகை,வான்புங்குடசம்
எறிவை,செறிவை
மணிப்பூங்கறுவிளை,பயணி
வாணி,பல்லினற்குரவம்
பசும்பிடி,வகுளம்
பல் இணர்காயா,விரிமலர்
ஆவிரை,வேரல்
தூறல்,குறிஇப்பூளை
குறுனருங்கண்ணி,குருகிலை
மருதம் விரிப்பூங்  கோங்கம்
போங்கம்,திலகம்
தேங்கமழபாதிரி,செருத்தி
அதிரல்,பெருந்தன்சன்பகம்
கரந்தை,குழலி
கடிகமல்கலிமா,தில்லை
பாலை,கல் கவர் முல்லை
குல்லை,பிடவம்
சிறுமாரோடம், வாழை
வள்ளி, நீள்நறுநெய்தல்
தாளை,தடவம்
முள் தட் தாமரை,ஞாழல்
மெளவல்,நறுந்தன் கொகுடி
சேடல், செம்மல்
சிறுசெங்குரளி,கோடல்
கைதை, கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி, மணிக்குழை
கல்கமல் நெய்தல், பாங்கர்
பரா அம், பல்பூந்தணக்கம்
ஈங்கை, இலவம்
தூங்கு இணர் கொன்றை, அரும்பு
அமராத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம்
பல்பூம்பின்றி, வஞ்சி
பித்திகம்,சிந்துவாரம்
தும்பை, துழாய்
சுடர்பூந்தோன்றி, நந்தி
நரவம், நறும்புன்னாகம்
பாரம் ,பீரம்
பைங்குருங்கத்தி, ஆரம்
காழ்வை, கடிகரும்புன்னை
நரந்தகம், நாகம்
நள்ளிருள்நாறி, மா இருந்குருத்தூம்
வேங்கையும்.

இதுல 99 பூக்கள் பெயர் இருக்கு.உங்க ஜோதிகா கிட்ட மனப்பாடம் பண்ணி சொன்னிங்க அப்படின்னா ஜோதிகா செட் ஆகிடும்.

Monday, May 24, 2010

'நகை' காதல்




துணிக்கடை நகைக்கடை 
இவை இரண்டை தவிர 
எல்லா இடங்களிலும் 
என்னவள்
என்னை காதலுடன் நோக்குகிறாள்.

Wednesday, May 19, 2010

FAMILY FIRST
எங்கள் அனைவருக்கும் முதலில் சிறிது ஏமாற்றமாக தான் இருந்தது.+2 தேர்வு முடிவுகள் வெளியான அன்று காலை 10 மணி சிறப்பு செய்திகளில் பாண்டியன் என்ற மாணவன் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற செய்தியை பார்த்ததும். ஆமாம் எல்லோரும் முதல் ஆளா வர்ரதுங்குறது நடைமுறைக்கு சாத்தியம் இல்ல தான்.என்  தம்பி கெளதம்[எனது இரண்டவாது பெரியம்மாவின் இரண்டாவது பிள்ளையின் மூத்த மகன் கெளதம் [சுருக்கமா அக்கா பையன்]]ஒரு 300 கிலோமீட்டர் தூரம் என்றாலும் (கோவில்பட்டி,மதுரைக்கு அருகில்) எனக்கு நெருக்கமானவர்கள் தான்.] பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான்.    

கெளதம் செல்வகுமார்  
OAAAAGWc60FOFPQJ1WORv271HY0T2POdP1tZkITkfUG7QIY4WmKqVd5OJ2j_-zEZl94y7sZv3oJnUwXSleb6gUx3bfkAm1T1UMXSyrBpDP0h31KIzLzgQHqGGwWR.jpg       
மதிப்பெண் பட்டியல்
OAAAAMRV0Kxc5lURm4LEcgV5kVu_uJzCiz9O4G1SSyf9KP5_a765nYJ2LnO0JeBv9dEuwjT0WVfKJvglbUtL6Ru66kYAm1T1UJZ2lGSwI76Wnvl3tP5NS7kClJkV.jpg
b.gif
ரைட் கிளிக் செய்து view image பார்க்கவும் .                             

பாண்டியனின் மதிப்பெண்ணில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றாலும் கௌதமிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்த்தோம்.அந்த ஏமாற்றமும் சிறிது நேரத்தில் காணமல் போனது. எனது தம்பி  கெளதம் தேர்வு முடிவை பார்த்ததும். ஏன் எனில் அவனும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரன் ஆகி இருந்தான்.கடந்த நூறு ஆண்டு கால குடும்ப வரலாற்றில்,இதுவரை +2  தேர்வு எழுதிய 76  அன்பு [அந்த 76 இல் நானும் ஒருத்தனுங்க] சொந்தங்களையும் பின்னுக்கு தள்ளி +2 தேர்வில் 1122 மதிப்பெண்கள் பெற்று குடும்பதிலயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளான்.என்ன டா இவ்ளோ 76 பேரா +2 முடிசுருக்காங்கன்னு நினைக்காதீங்க.ஒரு 50 பேர் +2 வரைக்கும் படிக்கல. ஒரு 30 பேர் +2 எழுதுறதுக்கு தயாரா இருக்காங்க.கொஞ்சம் பெரிய குடும்பம் அவ்ளோ தான்.ஆமா அம்மாவுக்கு மொத்தம் ஏழு அக்கா,ஒரு அண்ணன்,இரண்டு தம்பி. ஆக மொத்தம் பெரியம்மா பசங்க,பொண்ணுக [அக்கா,அண்ணணுக], அது போக அவங்க பசங்க,பொண்ணுகன்னு கூட்டி,கழிச்சு பாருங்க.[கலைஞர் கிட்ட தனி மாநில கோரிக்கை வைக்கலாம்ன்னு இருக்கோம்.]கணக்கு சரியா வரும்.ஆக இது கூட ஒரு மிக பெரிய சாதனை தான்.
                                தம்பியின் இந்த சாதனையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.தம்பியின் ஆவல் படி அவனின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துவது அன்பில்  அண்ணன் சரவணன.


டிஸ்கி : தினத்தந்தி,தினமலர்,சன் டிவி யில் தோன்றுவதை விட என் வலைப்பூவில் போட்டோ வருவது தான் பெருசு என்று இப்போது தான் L k g இல் சேர்ந்திருக்கும் எங்கள் ஆதித்யா +2 வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருவேன் என்று சபதம் எடுத்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, May 4, 2010

எனக்கு பிடிச்ச கதை

 

சேட்டைக்காரன்

நான் ஆசையாய் மறுபடி ஒருமுறை கண்ணாடியில் என்மீசையைப் பார்த்துவிட்டு - மழிக்கத் துவங்கினேன்.

இத்தனை அழகான மீசையை எதற்கு எடுக்கிறாய் என்று கேட்கிறீர்கள் தானே?

அந்த விபரம் கூறுமுன் - என்னைப் பற்றிக் கொஞ்சம்...

சார்லி. சிறுவயதில் முதல் மகனாய் என்னைப் பெற்ற உடன் இறந்துவிட்ட அம்மா, நான் கல்லூரியில் படிக்கும்போதே கிராமத்தில் இறந்த அப்பா... இதெல்லாம் உங்களுக்கு போரடிக்கும்.

நான் கல்லூரிப்படிப்பு முடிந்து எத்தனையோ இண்டர்வ்யூக்களுக்குப் போயும் வேலை கிடைக்கவில்லை என்றுதான் தொழிலதிபர் கார்வண்ணனைச் சந்திக்க முடிவெடுத்தேன். வெளியே அவர் அந்தத் தொழில் செய்கிறார், இந்தத் தொழில் செய்கிறார் என்று பெயர் கொஞ்சம் ரிப்பேரானவர்தான் என்றாலும் அவரிடம் சென்று என் நிலையை எடுத்துக் கூறினால் அவருக்கிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஏதாவதொரு வேலை தருவாரென்ற நம்பிக்கையில் நேற்று அவர் பங்களாவிற்குப் போனேன்.

வாட்ச்மேன், தோட்டக்காரனுடன் சமையல்காரியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்க டபாய்த்துவிட்டு உட்புகுந்தேன்.

வேலை கேட்பது போல பவ்யமாய்ப் போனால் மதிப்பிருக்காதென்பதால், நான்கைந்து பேர் அமர்ந்திருக்கும் பெரிய போர்டிகோவில் நின்று கொண்டிருந்த வீட்டு வேலைக்காரன் ஒருவனிடம் ‘சார் இருக்காரா?’ என்று கேட்டேன்.

யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர் வெளியே வந்தபிறகு பார்க்கலாமென்று அவன் சொல்லவே, சும்மா அந்தக் கட்டத்தில் உலாவினேன்.

அப்போதுதான் - ஒரு அறையின் கொஞ்சமாய்த் திறந்த ஜன்னலூடே அந்த சம்பாஷணை கேட்டது.

“மிஸ்டர் கார்வண்ணன்.. இது எட்டு லட்ச ரூபாய் விவகாரம். நாளைக்கு கோல்டன் ஹார்வெஸ்டுக்கு யாரை அனுப்பறீங்க?”

“நீங்க கவலையே படாதீங்க பெரிய நாயகம். நான் காலைல எட்டு மணிக்கு மணிமாறனை அனுப்பறேன். கழுத்துல நங்கூரம் டிசைன் செஞ்ச தங்க செய்ன் போட்டிருப்பான். மீசை இருக்காது. அதுவுமில்லாம நாந்தான் சொன்னேனே... ஆள் வந்த உடனே ‘வெல்கம்’ ன்னு நீங்க சொல்லுங்க. அவன் உடனே வேறெதுவும் சொல்லாம ‘யெஸ் வி கேன்’ன்னு சொல்லுவான். அதான் நமக்குள்ள கோடிங். வழக்கம்போல ரூம் நம்பர் நூத்தி ஒண்ணுதானே.. பணத்தை குடுங்க. சரக்கு அடுத்த நாளே வந்து சேரும்”

-அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை நான். நங்கூர டாலருடன் செய்ன் ரெடி பண்ண வேண்டுமே!

புரிந்ததல்லவா என் திட்டம்? வேலையத் தேடி வேட்டைக்காரனாக இருப்பதை விட, ஒரே நாள் சேட்டைக்காரனாகி எட்டு லட்சத்தை கைப்படுத்த முடிவெடுத்தேன். இரவோடிரவாக செய்ன் ரெடி செய்துவிட்டேன். இதோ காலை ஏழு மணி. மீசையையும் எடுத்தாயிற்று. அவன் எட்டு மணிக்குத்தானே போவான்.. கொஞ்சம் முந்திச் சென்று எட்டு லட்சத்தை லபக்கி வரலாமென்று புறப்பட்டேன்.

***

ஹோட்டல் கோல்டன் ஹார்வெஸ்ட் பணக்காரத் திமிருடன் இருந்தது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருந்த நூற்றி ஒன்றைத் தேடிப் போய்த் தட்டினேன்.

கதவு திறந்து ‘வெல்கம்’ என்றார் அந்த யாரோ.

உடனே ஞாபகமாய் ‘யெஸ் வி கேன்’ என்றேன்.

“நீதான் மணிமாறனா? கார்வண்ணனோட ரைட் ஹாண்ட்?”

“யெஸ்” பந்தாவாய் சொல்லியபடி நங்கூர டிசைன் செய்னை காஷுவாலாக எடுத்து டீ ஷர்டின் வெளியே விட்டேன். ‘இந்தா எட்டு லட்சம்’ என்று பெட்டியைத் தருவாரென எதிர்பார்த்தேன்.

ஆனால் அவரோ-




“யுவார் அண்டர் அரெஸ்ட்” என்றார் சினிமா க்ளைமாக்ஸ் போல.

திடுக்கிடலோடு ஓட நினைத்துத் திரும்பினேன்.

போட்டிருந்த காக்கி உடைக்கு விசுவாசமாய் கறுப்பு ராட்சஷனை கையிலேந்தி இருவர் நின்றிருந்தனர்.

***

“சொல்லுடா.. எங்களுக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் நீ ஏழு கொலை பண்ணிருக்க... அது போக கார்வண்ணனோட சேர்ந்து வேற என்னென்ன சமூக விரோதம்லாம் செஞ்சிருக்க?”

என்னைப் பிடித்த அதிகாரி பின்மண்டையில் தட்டியவாறே கேட்டுக் கொண்டிருக்க, எதிரிலிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி விளக்கம் கொடுத்தார்... “நேத்து எங்களுக்குக் கிடைச்ச நியூஸ்படி நாங்க அவசரமா நைட்டே கார்வண்ணனை வீட்டுல வெச்சு விசாரிக்கற விதத்துல விசாரிச்சுட்டோம். ஏழு கொலையையும் உன் மூலமா அவர் செஞ்சதை இன்னைக்கு அதிகாலைலதான் ஒப்புகிட்டார். கடைசியா அவர் சொன்னது நீ இன்னைக்கு இந்த ஹோட்டலுக்கு வர்ற விஷயம் பத்தித்தான். அதுனாலதானே உன்னைப் பிடிக்க முடிஞ்சது?”

நான் ஈனமான குரலில் கதறினேன்..

“நான் கார்வண்ணனைப் பார்க்கணும். இல்லைன்னா நீங்களே அவர்கிட்ட என்னைக் கூட்டீட்டுப் போங்க. ‘இவன்தான் மணிமாறனா?’ன்னு கேளுங்க” என் குரல் உடைந்திருந்தது.

“ஏண்டா.. அவர்தான் ஜீப்லேர்ந்து குதிச்சு லாரில அடிபட்டு இறந்துட்டாரே.. டாரே என்ன இறந்துட்டானே.. அவன என்ன கூப்டறது? நீ சொல்டா நாயே..”

அவர் அடித்த அடியில் என் டீ ஷர்ட் சிவப்பானது.

ஸார்.. நீங்களாவது சொல்லுங்க சார் நான் மணிமாறனில்லை, சார்லீன்னு....


கதையை எழுதியவர் : பரிசல்காரன் [http://www.parisalkaaran.com/2009/12/blog-post_23.html]

Wednesday, April 21, 2010

அன்பளிப்பு

பொதுவா மனிதர்களிடத்தில் அன்பை பிரதிபலிப்பதற்கு என்று வைத்திருக்கும் வழிகள் பல இருந்தாலும் அதில் அன்பளிப்பு என்ற வழி தான் பெரும்பாலும் பின்பற்றபடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து. கொடுக்கிற அன்பளிப்பு வாங்குறவங்களுக்கு உபயோகமா இருக்கணும்கறது தான் எல்லாரோட நினைப்பா இருக்கும். மச்சி இந்த மாதிரி என்கிட்ட நாலு இருக்கு.  ஐயோ சாரி டி எனக்கு இந்த கலர் பிடிக்காதே. இந்த மாதிரி எல்லாம் உங்க நண்பர்கள் உங்ககிட்ட கண்டிப்பா கேட்டு இருப்பாங்க.அந்த நேரம் மிகவும் தர்மசங்கடமா இருக்கும்.  அதை தவிர்பதற்க்கு அவங்க கிட்ட எது இல்லையோ அத கொடுதொம்ன்னா அவங்களும் சந்தோஷ படுவாங்க.நமக்கும் ஒரு திருப்தி கிடைக்கும் இல்லையா!




என்னிடம் இல்லாத நான் விரும்பும் பொருட்கள்:-

  1. சுஜாதா வின் "வசந்த குமாரனும் கணேஷ பட்டரும்" புத்தகம் நீண்ட நாட்களாக தேடி கொண்டிருக்கிறேன்.[இதுக்காவே திருச்சி பழைய புத்தக கடைகளுக்கு போய் தேடலாம்ங்க்றது என் நீண்ட நாள் ஐடியா. திருச்சி நண்பர்கள் கவனிக்கவும்]
  2. ஷாருக்கான் உடைய தேசம் பட DVD . இந்த படம் பாத்துட்டேன் ஆனா ஹிந்தில[SWADESH] தான் பாத்திருக்கேன்.தமிழ்ல ஷாருக்கிற்கு SPB தான் டப்பிங்.ரொம்ப நல்லா இருக்கும்ன்னு  சொல்ல கேட்டு இருக்கேன்.வாங்கி பாக்கணும்.  
  3. அப்புறம் இசைன்னா எல்லாத்தையும் மாதிரி எனக்கும் ரொம்ப இஷ்டம்.ஆனா இப்ப அத  ரசிக்கறதுக்குல ஒரு சின்ன கஷ்டம். ஆமா என்னோட கைபேசில பாட்டு கேக்குற வசதி இல்ல.அதனால MP3 WITH MEMORY CARD வசதி உள்ள ஒரு கைபேசி அல்லது SONY IPOD . 
  4.  ஆளாளுக்கு அவங்க ஆள்க்கு குறுந்தகவல் அனுப்பிட்டு இருக்கிறப்ப நான் மட்டும் சும்மா இருப்பேன்.அதனால குறுந்தகவல் அனுப்பறதுக்கு ஒரு நல்ல குணமுள்ள, பண்பான,அழகான பெண்ணின் கைபேசி எண்.
  5. Apache மஞ்சள் கலர் துள்ளுந்து . [அப்புறம் அந்த பொண்ண வெளில அழைச்சுட்டு போறதுக்கு வண்டி வேணாம்.]
 அவ்ளோ தாங்க என்னோட தேவைகள். இதுக்கு மேல உங்கள நான் கஷ்டபடுத்த விரும்பல.எதுக்குடா சம்பந்தமே இல்லாம இதெல்லாம் சொல்றேன்னு பாக்குறேங்களா. இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட பிறந்த நாள் மே 1 வருது.அதனால தான். எனக்கு அன்பளிப்பு தர நினைக்கும் நண்பர்கள்,தோழியர்கள், கடைக்கு செல்லும் முன் இந்த லிஸ்டை அச்சிட்டு [PRINTOUT] செல்லுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.

மறந்து விடாதீர்கள் மே முதல் தேதி.தேவை இல்லாமல் உருவாகும் வீண் தர்ம சங்கடத்தை தவிர்க்கவும். 

பின் குறிப்பு:-
இது எதையுமே அன்பளிப்பா கொடுக்காம ஒரு குறுந்தகவல், ஒரு  மின்னஞ்சல், அட ஒரு பின்னுட்டம், ஒரு கால் பண்ணி வாழ்த்து சொன்ன கூட எந்த தர்ம சங்கடமும் எனக்கு ஏற்படாது எனவும், நான் இந்த வாழ்த்திற்கே மிகவும் மகிழ்வேன் என  தெரிவித்து கொள்கிறேன்.

Wednesday, March 31, 2010

எனக்கு பிடிச்ச பெரிய கதை

அபரஞ்சிதா

தை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில்  இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த  புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது நேரத்திற்குள்ளாகவே புத்தகத்தில் மூழ்கிப்போனேன், மலை பாதையாதலால் மெல்லென புறப்பட்ட ரயில் அதே வேகத்தில் தான் சென்று கொண்டிருந்தது, மிக அரியவகை மரங்களாலும்,அழகிய மலைகளாலும் சூழப்பட்டதால் இந்த ரயில் பயணம் ஒரு ரம்மியமான உணர்வை ஏற்படுத்தி கொடுத்ததை ரசித்தபடியே ஜன்னல் பக்கம் திரும்பி லயித்து கொண்டிருந்தேன்,சட்டென என் கண்களை ஊடுருவி யாரோ என்னை பார்ப்பது போல் இருக்க எதிர்வரிசையை நோக்கினேன் .கால் மேல் காலிட்ட ஒருத்தி ”நாகாலாந் போஸ்ட்” எனும் நாகாலாந்தின் பிரபல பத்திரிக்கையை வைத்து தன் முகம் தெரியாதவாறு படித்துக்கொண்டிருந்தாள் அவள் என்னை பார்க்கவில்லை என ஊர்ஜிதம் ஆனது, அவளுக்கு நேர் மேல் இருக்கையில் சற்று பருத்த உடல் கொண்ட பெண்மணி என்னையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.அந்த அம்மாவிற்கு 40க்கும் குறையாமல் வயது இருக்கும்,இவ்வளவு கனத்த உடம்பு கொண்ட பெண்மணி எப்படி அங்கு ஏறி படுத்தாள் என்பதை பார்க்கமுடியவில்லையே என்ற வியப்பு தொற்றிக்கொண்டதை விரட்ட முடியவில்லை.அந்த பேப்பர் பெண்மணி மெதுவாக பேப்பர் மடித்து விட்டு கைபையில் இருந்து”குட்சா கவுந்” எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தாள்,[குட்சா கவுந் நாகாலாந்தின் மெது ரொட்டி ].அப்போது தான் பார்த்தேன் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை,என்ன ஒரு பேரழகு, என்ன ஒரு தேஜஸ் அவளை விட்டு என் கண்களை பிரிப்பதற்கு வெகு நேரம் எடுத்துக்கொண்டது மூளை.
ன்னையே பார்த்து கொண்டிருந்தவள் நான் அவளை பார்ப்பது தெரிந்ததும் தலையை சன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டாள். அவள் அந்த பக்கம் திரும்பினது கூட எனக்கு வசதியாய் போனது அவள் அழகை கண் கொண்டு ரசிக்கலாமே,நல்ல திக்கான மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள், இருக்கமாக இருந்திருக்கும் போல அடிக்கடி சரி செய்து கொண்டிருந்தாள்.பொசு பொசுவென கழுத்துக்கு சற்றே கீழே தள்ளி கோர்வையாய் வெட்டப்பட்ட தலைமுடி அனைத்தையும் இழுத்து ஒரே hair band ல் அடக்கியிருந்தாள், அவள் அழகு மாதிரியே திமிறிக்கொண்டிருந்தது hair bandல் அடைபட்ட தலைமுடிகளும்.
வளுடைய மேல் சட்டை இடுப்புக்கு சற்று கீழிறங்கி முடிந்துபோன இடத்தில் ஆரம்பித்த கால் பேண்டு தொள தொள வென தொடங்கி  இருக்கமாக முடிந்த இடத்தில் அழகான காலணி அணிந்திருந்தாள்.நடுநடுவே வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு ஆங்கிலம், ஹிந்தி,தெலுங்கு என கலந்துகட்டி பேசிக்கொண்டிருந்தாள், இதில் எனக்கு புரியாத இரு மொழிகளும் அடக்கம், பேச்சின் நடுவே அவளின் போதை தரக்கூடிய கண்கள் என்னை ஆராயமலில்லை, அவளின் ஒவ்வொரு பார்வையும் என் ஒவ்வொரு வயதாய் தின்று கொண்டிருந்தது,இன்னும் ஒரு முறை பார்த்தால் கூட முழுதுமாய் உடைந்து போய்விடுவேன் என்று ரத்தம் முழுக்க ஹார்மோன் திரவத்தை பீய்ச்சி அடித்தது.அடுத்த முறை அவள் பார்க்கும் போது கண்டிப்பாக பேசி விட வேண்டும் என ஆண்மைக்கான கூறுகளை தேடிக்கொண்டிருந்தது மனம், அவள் மதிக்கும் பெண்மையில் தான் ஒளிந்து கொண்டுள்ளது நான் மதிக்கும் ஆண்மை என நான் புரியும் கணத்தில் ஒரு பார்வை பாத்தபடியே கேட்டாள்” நீங்க தான சத்யா”? தூக்கிவாறி போட்டது எனக்கு, நான் தழுதழுத்த குரலில் ஆமா!! உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன்,தெரியும் அவ்ளோ தான் !! என்றவளை சும்மா விட முடியுமா?திரும்ப திரும்ப கேட்டதில் மேஜர் சார் என்னை வழியனுப்ப வருகையில் ”ஆல் தி பெஸ்ட் சத்யா” என கூறியதை நினைவுகூர்ந்தாள்.
ங்க பேர்? என கேட்டு முடிக்கும் முன்பாக “அபரஞ்சிதா” என முடித்தாள். உண்மையாவே நல்ல பேருங்க என்று சொல்லி முடிக்கையில் ஒரு பார்வை பாத்தாளே பாக்கனும்,என் கண்னை பார்த்து உன்னால் பொய் பேச வேறு முடியுமா என்பது போல் இருந்தது.
” அது எப்படி முதல் முறை
பார்க்கும் போதே ஆண்மையின் கூறுகள்
அழகு முன்பாக படு தோல்வி
அடைய முடியும் என்கறீர்களா?
இல்லை என்று வாதாடினால்,
நீங்கள் இது வரை அபரஞ்சிதா
போன்ற தேவதைகளின் தேவதையை
பாத்ததில்லை என்று அர்த்தம்”
கொல்கத்தா ரயில் நிலையத்தில் இறங்கி வெகு நேரம் பேசிகொண்டிருக்கும் போது தெரியவந்தது அவளின் இலக்கியம் மீதான ஆர்வம்.அசோகமித்திரன்,கோணங்கி என தொடங்கிய பேச்சு நீண்ட நேரத்திற்கு பிறகு நிர்வாண எழுத்தாளனில் வந்து முடிந்தது.வண்ண நிலவனின்” கடல் புரத்தில்” பற்றி ஒரு விவாதமே நடத்தி முடிக்கும் நேரத்தில், டைரியில் சிலவற்றை எழுதிக்கொண்டு அவளுக்கு தூக்கம் வந்ததாய் சொல்லி தூங்கி போனாள்.அவளின் ஒவ்வொரு பேச்சும் , தெளிவான சிந்தனையும் என்னை விட எனக்குள் இருந்த ரசனைகாரனுக்கு நிச்சயம் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என அறுதியிட்டு கூற முடியும், அவன் இன்று இரவுமுழுதும் உறங்கானிலை கொள்வான் என்பதும் திண்ணம். என்னுடைய டயரி குறிப்பில் தே.பா.நா என எழுதி விட்டு அவள் தூங்கி வெகுநேரம் அவளையே பாத்துக்கொண்டிருந்தவன் எப்போது உறங்கினேன் என தெரியவில்லை.
காலையில் எனக்கு முன்பாகவே எழுந்துவிட்டாள் போல நான் விழிக்கும் போது யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.ரயில் மெர்கம் பூர் நிலையம் தாண்டி ஆந்திராவை கடந்து கொண்டிருந்தது,நான் பல் தேய்த்துவிட்டு வந்ததும் எனக்கான காலை உணவை வாங்கி வைத்ததாய் கைகாட்டினாள், ஆனாலும் தொடர்ந்து அலைபேசியில் பேசியபடியே இருந்தாள்,அதில் இனி சடாச்சாரா வர முடியாது எனவும்,அங்கும் தனக்கு சென்னையில் கிடைக்க கூடிய அளவு தான் சம்பளம் தரப்படுவதாகவும் பேசிக்கொண்டு இருக்கையிலேயே அந்த இணைப்பை துண்டித்துவிட்டு அவள் அம்மாவிடம் இனி சடாச்சரா  ஒருக்காலும் வர மாட்டேன் எனவும் மாமாவை இது விஷயமாக என்னை தொல்லைபடுத்த வேண்டாம் எனவும் கூறினாள்,பேசி முடித்ததும் அவளிடம் கேட்டேன் அவளின் வேலை பற்றியும் சடாச்சாரா வருகை பற்றியும்,பேச்சின் தொடக்கமாக தன் தலைமுடியை வாரி சுருட்டி  குடுமி இட்டாள், குடுமியில் இருந்து பிரிந்துவந்த முடிகள் நான் இன்னும் கொஞ்ச நேரம் உன் முகத்தோடு உறவாடி கொண்டிருக்கிறேன் என்றவாக முகத்தின் மேல் படர்ந்து விரிந்திருந்தது.அடிக்கடி அந்த முடிகளை தன் விரல்களால் இழுத்துச்சென்று தன் காது இடுக்கில் விட்டுக்கொண்டிருந்தாள்.காது இடுக்கில் வழிந்த முடி காது மடல் வழியே கீழிறங்கி என்னை பார்த்துக்கொண்டிருந்தது.
காலை உணவை சாப்பிட்டு முடிக்கையில் மணி 11யை நெருங்கி கொண்டிருந்தது. அவளின் அழகுக்கு முன் மீண்டும் மீண்டும் படுதோல்வியை சந்தித்துக்கொண்டிருந்த என் சுயகட்டுபாடு ஒரு நேரத்தில் அவளின் சொல்லொண்ணா அழகில் மயங்கி விட்டதாக புலம்ப ஆரம்பித்த கணத்தில் அவள் முன் என் இருப்பை நான் இன்னும் நீட்டிக்கும் போது சுயகட்டுப்பாடே இருக்காது என்பதால் அங்கிருந்து வந்து ரயில் கதவு பக்கதில் நின்று கொண்டேன்.அங்கு வந்த TTR மாலை 6 மணிக்கு முன்பாக சென்னை சேர்ந்துவிடும் என ஆருடம் கூறினார்.ஒவ்வொரு நிமிடமும் அவள் என்னை முழுதாக உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அவளின் உள்வாங்கல் முற்றுப்பெறுவதற்கு முன்பாக அவளின்  28 மணி நேர அழகு என்னை பெரிதும் இம்சித்துவிட்டதாக  சொல்லிவிடுவதென முடிவு செய்த வண்ணம் இருக்கையில் வந்து அமர்ந்தேன்.என்னை எதிர்பாத்தவளாய் எங்க போயிருந்தீங்க? என்றாள்…
முதல் முறையாக சொன்னேன் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று ,சிறிதே வெட்க்கபட்டவளாய் உயர் தர ஆங்கிலத்தில் இரண்டு நிமிடம் பேசியிருப்பாள் அந்த உரையின் சாராம்சம் ஒரு குட்டி ஜென் கதையும், எனக்கான நன்றியும்.மாலை வரை என்னை பற்றி பல கேள்விகள் கேட்டு பத்திரப்படுத்திக்கொண்டாள்.மணி நான்கு நெருங்கும் போது ரயிலில் நிறைய தமிழ் வாசம் அடித்தது. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு என்றேன், அப்பொது அவள் முகம் சற்று வாடியிருப்பதை  பார்க்க முடிந்தது. இத்துனை நேரமும் எதிர் முனையிலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அவள் என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.சிறிது நேரம் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், அவளுக்கு என்ன தோனியதோ முகம் கழுவிவிட்டு வந்தாள்,இப்போது இன்னும் அழகாய் இருந்தது எந்த விதமான செயற்கை தனமும் கலக்காத அந்த முகம். பொட்டுவைக்காம உங்க முகம் ரொம்ப அழகா இருக்குனு நான் சொன்னதுக்காக எடுத்த பொட்டைக்கூட வைக்காமல் மீண்டும் எதிரில் உட்கார்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்,நானும் அபரஞ்சிதா  மட்டுமே உணரக்கூடிய பூக்களில் இருக்கும் நிசப்தம் அங்கு நிறைவேறிக்கொண்டிருந்தது.இன்றைய டைரியில் இதை குறிக்க வேண்டும் என்று நான் நினைக்கும் போது அவள் ஏதோ குறித்துக்கொண்டிருந்தாள் அவளுடைய டைரியில்.
து வரை இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு எங்கள் இருவரையும் விளிம்பு நிலைக்கு தள்ளிக்கொண்டிருந்தது அதை உணர முடிந்ததே தவிர வார்த்தைக்குள் அடைக்க முடியவில்லை,”உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் என்றாள்” மதியத்திற்க்கு பிறகு அவள் என்னிடம் பேசிய முதல் வார்த்தை அது தான்,சொல்லுங்க அபரஞ்சிதா என்றேன், குட்சா கவுந் எடுத்த அதே கைபைக்குள் விட்டு அவளுடைய டைரியை எடுத்து என்னிடம் நீட்டினாள், அதன் அட்டை அவள் குடித்து வைத்த டீ டம்ளரின் நிறத்தில் இருந்தது ,நான் எதுக்கு என கேள்வி கேட்கும் முன்பாக இதுல என்னோட மொபைல் நம்பர் இருக்கு இந்த டயரிய முழுசா படிச்சு பாத்துட்டு எனக்கு கால் பண்ணுங்க, கால் பண்ண தோணலனா என்னோட முகவரி இருக்கு அதுக்கு டைரிய கொரியர் பண்ணுங்க சரியா என்று கேட்டாள், எனக்கு என்னவோ போல ஆகிவிட்டிருந்தது, மீண்டும் ஒரு முறை கேட்டேன் அபரஞ்சிதா, உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியுமா என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து சன்னல் பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள்,என்னை அவளுக்கு முன்னமே தெரிந்திருக்கும் என்பது போலத்தான் இருந்தது அவளின் இந்த கடைசி நிமிட செய்கைகள், இது வரை இயல்பாக இருந்தவள் என்ன ஆனது, ஏன் அவளுடைய டைரியை என்னை படிக்க சொல்கிறாள், அவளின் மெளனத்திற்கு காரணம் என்ன, என்னை முன்னமே தெரிந்திருந்தால்,எப்படி? ஏன்? விடை தெரியாத இத்தனை கேள்விகள் என் மனதில் இருக்கும் போதே அடுத்த 5 நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய ஆவடி வருவதாக காவலர் வந்து சொல்லி சென்றார். அவளுடைய டைரியை என் மடிக்கணிணி பையில் வைத்துக்கொண்டு இறங்குவதற்கு தயாராய் என் மற்ற உடைமைகளை எடுக்க தொடங்கிய போதும் அவளிடம் எந்த சலனமும் இல்லாமல் சன்னல் பார்த்து கொண்டிருந்தாள்.அவளுடைய டைரியில் கடைசி 2 நாட்களாக என்னை பற்றி என்ன எழுதியிருப்பாள் என்பதிலேயே என் கவனம் முழுதும் இருந்தது, அறைக்கு சென்றால் கார்த்தி படிக்கவிடமட்டான் என நன்றாக தெரியும்,அதனால் கடைசி இரண்டு பக்கங்களையாவது ரயில் கிளம்பி சென்றதும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து படித்துவிட வேண்டும் என்ற ஆசையில் முண்டியடித்து கதவு பக்கம் நின்று கொண்டிருந்தேன். ஆவடியில் ரயில் 2 நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால் அனைவரும் என்னுடைய கதியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
மீண்டும் ஒரு முறை அவளை பார்க்க வேண்டும் என தோன்றியது அவசரமாக உள்ளே சென்று அவளை பாத்தால் சில நிமிடத்துக்கு முன்பு பார்த்த அதே நிலையில் இருந்தாள், அவளிடம் எதும் சொல்ல தோணாமல் மெளனமாய் திரும்பி பார்க்கையில் ரயில் நின்று ஒவ்வொருத்தராய் இறங்க ஆரம்பித்திருந்தார்கள். வண்டி கிளம்புவதற்கு முன் அவளை கீழே இறங்கி சன்னல் வழியாக பார்த்துவிடலாம் என எண்ணி கீழே அவசரமாக இறங்கி பார்க்கையில் அது 2 வகுப்பு குளிர்சாதனப் பெட்டியாதலால் எதுமே தெரியவில்லை நல்ல வேளை எனக்காக கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாள்,ஒரு புன்னகை பூத்து மடிக்கணிணியுடன் கூடிய அவள் டயரியை உயர்த்திக்காட்டினேன், ஒரு வசீகரிக்கும் புன்னகை ஒன்றை வீசின பிறகு ரயில் அவளை உள்ளிழுத்துக்கொண்டது.முன்பு தோன்றின எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என ஆர்வம் கொப்பளிக்க அருகில் இருந்த நடை மேடை இருக்கையில் அமர்ந்து மடிக்கணிணி பையில் இருந்த அவள் டைரியை எடுத்து முதல் பக்கம் புரட்டினேன், அதில் சிவப்பு கலர் மை பேனாவில் அழகான கையெழுத்தோடு எழுதப்பட்டிருந்தது “இது ஒரு விபச்சாரியின் டயரி குறிப்புகள்” என்று. டப் என தொண்டை குழியை ஏதோ அடைத்துக்கொண்டது ,நிமிர்ந்து பார்க்கையில் தொலை தூரத்தில் புள்ளியென மறையத்தொடங்கி இருந்தது அவளை உள்ளிழுத்துச்சென்ற ரயில் .

படிச்ச இடம்                : அடலேறு [http://adaleru.wordpress.com/2009/11/12/aparanjitha/]
சொல்ல நினைப்பது : நன்றி, அருமை அடலேறு ...........!