Friday, January 22, 2010

லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!

அ,ஆவை தலைகீழா சொல்ல முடியுமா? 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா? கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல முடியுமா? ‘கோலங்கள்’ சீரியல்கில்லர் என்னிக்கு முடியும்னு சொல்ல முடியுமா? ‘இது என்னவே பெரிய விசயமாக்கும், சொல்லிடலாம்’னு மல்லுக்கு நிக்கிறீங்களா! உங்க காதலை உங்க காதலிக்கிட்ட தைரியமா சொல்ல முடியுமா? என்ன தயங்குறாப்ல தெரியுது. இதுக்காகவே புதுசா ஒரு பொஸ்தகம் வந்திருக்கு. ‘லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!’ இதான் அதோட டைட்டில்! இதை எழுதுனவரு பேரை அடிக்க மறந்துட்டாங்க! அட, விலையைக் கூட போடலைன்னா பாத்துக்கோங்களேன். ஆனா, இப்போ சந்தையில டான் ப்ரௌனுக்கு பொஸ்தகளுக்கு அப்புறமா இதுதான் சக்கைப்போடு போடுது! அந்த பொஸ்தகத்திலிருந்து.
லவ் @ லாஸ்ட் நிமிடம்!
உங்க காதலி என்னிக்காவது எங்கேயாவது வெளியூருக்கு கிளம்பலாம், அது என்னிக்கு, எப்படின்னு தெரிஞ்சு வைச்சுக்கோங்க. இப்ப உதாரணத்துக்கு உங்க காதலி சொப்னா, கும்மிடிப்பூண்டிக்கு ‘கூ குச் குச்’ வண்டியில கிளம்பலாம். இன்னும் ரெண்டே நிமிசம்தான் இருக்கு ரயிலு கெளம்ப. ‘நான் போயி தண்ணி புடிச்சிட்டு வாரேன்’னு பாட்டிலோட நீங்க எங்கியாவது தள்ளி போயி நின்னுக்கணும். ரெட்டு லைட்டு, ஆரஞ்சாகி, பச்சையா பல்லைக்காட்டும். ரயிலு நகர ஆரம்பிக்கும். நீங்க ‘ச்ச்சொப்புனாஆஆ…’ன்னு கத்திக்கிட்டே தண்ணி பாட்டிலோட அங்கேயிருந்து ஸ்டைலா ஓடி வர ஆரம்பிக்கணும். நாலு பேர் மேல மோதணும், ரெண்டு தடவ லக்கேஜ் தட்டி விழணும். நீங்க இப்படி பரபரப்பா ஓடி வர்றதை உங்க காதலி படபடப்பா பாக்கணும். ‘இந்தா புடிச்சுக்கோ’ன்னு பாட்டிலை அந்தக் கடைசி நிமிசத்துல அவ கையில கொடுக்கறப்போ, ‘ஐ லவ் யூ’ன்னு ஒரு குட்டி பேப்பர்ல (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம) எழுதிக் கொடுத்துரணும். அந்த ‘லவ் @ லாஸ்ட் நிமிட்’ல காதல் குபீர்னு பத்திக்க 99% சான்ஸ் இருக்குன்னு ‘லவ்வாயணம்’ சொல்லுது. சொப்னா சட்டுன்னு செயினைப் புடிச்சி இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கி வந்து கையை நீட்டி…. ‘நாலு அறை’ கூட விடலாம். யாரு கண்டா!
ரெமோ நமஹ!
பஸ் ஸ்டாப்ல சொப்னா நிக்கிறா! உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தை கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ‘இருக்கு. புடிச்சிருக்கு. உன்னை. மனசை. காதலை. எல்லாம். புடிச்சிருக்கு. காதலிக்கிறேன்’னு அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ‘நம்பலேல. நீ என்னை நம்பலேல..’ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டை பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும். (ரெட் சிக்னல் விழுந்திருக்குற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான்!) இப்படியே குறைஞ்சது பதினாலு தடவையாவது செஞ்சா லவ் சிக்னல் கெடைக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி, அவளுக்கு பஸ் கிடைச்சிருக்கும், ஏறிப் போயிருப்பா!
கவிதையே தெரியுமா!
கவிப்பித்தன், காதல் அடியாள், ரொமான்ஸ்தாசன், ரோமியோநேசன் இப்படி யார்கிட்டயாவது போய் கடன் கேளுங்க. பணம் இல்லீங்க, உங்க மனசை அவகிட்ட ‘படார்’னு தொறந்து காட்டுற மாதிரி ஒரு கவிதையை செஞ்சு தர சொல்லுங்க! யாரும் கிடைக்கலியா.. கழுத, கவிதைதானே. எழுதிட்டாப் போச்சு. 5 இங்கிலீசு வார்த்தை, 4 1/2 தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு, மேலே ரெண்டு ஆச்சரியக் குறியைத் தூவி இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி! இப்ப உதாரணத்துக்கு,

‘சன்னைத் தின்ன முடியாது – மானே
உன் கண்ணு சன்னு!
பப்ஸைத் தின்ன முடியும் – மீனே
உன் லிப்ஸ் பப்ஸ்!
ரோஸுக்கு நோஸ் கெடையாது – தேனே
உன் நோஸ் ரோஸ்!
சொப்னா!
என் எதயம் ஒரு Hard Disk!
நீ வந்துப்புட்ட -
இனி அது Heart Disk!
நீ உன் எதயம் give.
நான் என் எதயம் give.
அதுக்குப் பேருதான் லவ்வு!

இப்படி ஜிவ்வுன்னு ஒரு கவிதைய போட்டுத்தாக்கினா அதுக்குப்புறம் சான்ஸே இல்லை. அட ஆளு மயங்கிடும்பா!
50 பைசா காதல்!
டவுன் பஸ். முதல் சீட்டில் சொப்னா! நல்ல கூட்டம். ‘கொருக்குப்பேட்டை ஒண்ணு’ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்துரூபாய பாஸ் பண்ணுறா! நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த ‘புனித’ நோட்டை அனுப்பி விடுறீங்க! ‘50 பைசா சில்லறை வேணும்’னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 50 பைசாவை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது சொப்னாவுக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 50 பைசாவை எடுத்து ‘தாங்க்ஸ்’னு நீட்டுவா! உடனே கருமம் புடிச்ச மாதிரி வாங்காம, ‘எனக்கு 50 பைசா வேண்டாம், இந்த 50 கிலோ மிராண்டா பாட்டிலோட இதயம்தான் வேணும்’ பளிச்சுன்னு ஒரு பஞ்ச் டயலாக்கை நெஞ்சுல இருந்து எடுத்து விடணும். அப்புறமென்ன, உங்களுக்கு பாலிஷ் போட பஸ்சு 50அடி தள்ளிப்போய் போலீஸ் ஸ்டேஷன்ல போய்கூட நிக்கலாம்.
போஸ்டர் விடு தூது!
சொப்னா நாய்க்குட்டிக்கு பொறந்த நாளா, அவ பாட்டிக்கு (12வது தடவையா) 51வது பொறந்தநாளா, அவளோட பாசத்துக்குரிய பக்கத்து வீட்டு தாத்தா மண்டையப் போட்டுட்டாரா, அவளோட பேவரிட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் படம் ரிலீஸ் ஆகுதா, உடனே நீங்க போஸ்டர் அடிச்சு ஒட்டிரணும். சொப்னாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வருதா? முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க! இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் ‘ஏன் இப்படி பண்ற?’ன்னு சொப்னா கேட்பா! அப்ப காதலை கண்டமேனிக்கு கொட்டிரணும். அப்பவும் உட்டுட்டா, அவ கல்யாணத்துக்கும் நீங்கதான் போஸ்டர் அடிக்கணும் மாமூ!
SMS புரட்சி!
காதலை நேரே சொல்லப்போனா உதடு ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள், அதாம்பா SMS. அதுலயும் ‘I LOVE YOU!’ அப்படிங்கிற வார்த்தை மொத்தமா அனுப்ப விரலு மிரளுதா? தவணை மொறையில ஒவ்வொரு எழுத்தா குழப்பி குழப்பி அனுப்புங்க. ஆனா எப்படியாவது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஒரு மாசத்துக்குள்ள மொத்த எழுத்துக்களையும் அனுப்பி வைச்சுருங்க! இது ரொம்ப பாதுகாப்பான வழி. இதுல உள்ள ஒரே ஒரு சின்ன ரிஸ்க். சொப்னா மெஸேஜை ‘Y I LOVE U’ன்னு தப்பா புரிஞ்சுக்கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம் சகஜம்பா!
ஆமா, இவ்வளவு அருமையான பொஸ்தகம் எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்லீயே வருத்தப்படாதீங்க. மொத்த பொஸ்தகமே இம்புட்டுத்தான்.
(ஒரு சின்ன திருத்தம்: பொஸ்தகத்தின் தலைப்பு மேலே தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜமான தலைப்பு இதுவே : ‘லவ்வைச் சொல்லக்கூடாத சில ஜிவ் வழிகள்!’ )
[நன்றி: முகில் தினமணி கதிரில் எழுதியது.)

அப்பா சொன்னாரென

அப்பா சொன்னாரென
பள்ளிக்கு சென்றேன்
தலை சீவினேன்
சில நண்பர்களை தவிர்த்தேன்
சட்டை போட்டு கொண்டேன்
பல் துலக்கினேன்.வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று


1955 இல் கனிமொழி எழுதிய இந்த கவிதை ஏறக்குறைய  எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.

இன்று கனிமொழி இந்த கவிதையின் கடைசி வரியையும் எழுதி விட்டார்....
' பாராளும்மன்றத்திலும் நுழைந்தேன்........?

[நன்றி :கற்றதும் பெற்றதும் நூலில் சுஜாதா ]

Wednesday, January 20, 2010

ஹைக்கூ

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை.....................

கொலைகள் நடப்பது உனக்காக


குருவும் சீடனும் கானகத்தில் மவுனமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.கானகத்தின் அழகை ரசித்துக்கொண்டே வந்தான் சீடன்.அந்த அழகை குலைப்பதுபோல் ஒரு பறவையின் அழுகுரல் கேட்டது.காட்டுப்பூனை ஒன்று அழகிய கிளி ஒன்றை பிடித்து குதறிக் கொண்டிருந்தது.
எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தார் குரு.கிளியை திரும்பி திரும்ப பார்த்தபடி நடந்தான் சீடன்.பிறகு ஏதோ யோசித்தான்.கல் ஒன்றை எடுத்து பூனையின் மீது எறிந்தான்.பூனை கிளியை விட்டது.கிளி தப்பி பறந்தது.
"உலக வரலாற்றை மாற்றி விட்டாய்"என்றார் குரு.மரத்தடியில் மவுனமாக அமர்ந்தார்.
"புரியவில்லை குருவே" என்றான் சீடன்.
"இன்னும் ஒரு மணிநேரம் இந்த இடத்தை விட்டு எழுவதில்லை என உறுதி அளிக்கிறாயா?" என்று கேட்டார் குரு.
"செய்கிறேன்" என வாக்குறுதி கொடுத்தான் சீடன்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.
45 நிமிடங்கள் கடந்தன.காற்றின் சலசலப்பை தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் கானகம் அமைதியாக இருந்தது.
"காப்பாற்றுங்கள்" என ஒரு பெண்ணின் ஓலம் கேட்க துவங்கியது.விரைவில் அந்த மரத்தடியை நோக்கி ஒரு பெண் ஓடிவந்தாள்.துரத்திக்கொண்டு இருவர் ஓடி வந்தனர்.அவளை பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றனர்.
சீடனின் உடல் நடுங்கியது.குருவை பரிதாபத்துடன் பார்த்தான்.
அவர் முகம் சலனமற்று இருந்தது.
"ஒரு அபலையின் வாழ்வை விட என் சத்தியமும், இந்த படிப்பும், துறவறமும் பெரிதல்ல" என்றான் சீடன்.எழுந்தான்.
"உலகை மாற்ற போகிறாய்" என்றார் குரு.
"ஆம்" என்றான் சீடன்.
"உன் மாற்றம் விளைவிக்க இருக்கும் விளைவை பார்" என்றார் குரு.
சீடன் கண் முன் எதிர்கால காட்சிகள் விரிந்தன.அவன் அந்த பெண்ணை காப்பாற்றுகிறான்.அவள் நன்றி கூறி தன் கணவனுடன் செல்கிறாள்.அவளுக்கு பிறக்கும் இரு மகன்கள் வளர்ந்து கொள்ளையராகின்றனர்.சீடனுக்கு பிறக்கவிருக்கும் மகளை கொடூரமாக பலாத்காரம் செய்து அவள் கணவனையும் குழந்தையையும் கொல்கின்றனர்....
பயத்தில் விறுவிறுத்த சீடன் கண்களை திறந்தான்.
"உலகை மாற்றுவதானால் மாற்று" என்றார் குரு.
"காப்பாற்றுங்கள்" என அலறினாள் அந்த பெண்.
தயக்கத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் சீடன்.
"அப்பா.நில்லுங்கள்.என்னை காப்பாற்றுங்கள்" என சீடனின் மகள் அலறும் காட்சி கேட்டது.
"குருவே, இதை என்னால் சகிக்க முடியவில்லை" என அலறினான் சீடன்.
"அப்படியானால் காப்பாற்று" என்றார் குரு.
சீடன் மவுனமாக நின்றான்.ரவுடிகள் அவளை பலாத்காரம் செய்து கொலை செய்வதை காண சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டான் சீடன்..அவன் கண்ணில் நீர் வழிந்தது.
அவன் கண்முன் வரும்காலம் விரிந்தது.அந்த பெண்ணின் கணவன் மனைவி இறந்த அதிர்ச்சியில் பைத்தியமாகிறான்.அவன் மகன்கள் இருவரும் அனாதையாகி உணவின்றி இறக்கின்றனர்.சீடனின் மகள் கணவனுடனும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.
"குருவே ஏன் இந்த துன்பம், ஏன் இந்த துயரம், ஏன் இந்த கொடூரம், ஒருவர் அழிவில்தான் மற்றவர் வாழவேண்டுமா?" என அழுதான் சிஷ்யன்.
"அனைத்தும் உனக்காகத்தான் சீடனே" என்றார் குரு."உலகில் இதுவரை நடந்த அனைத்து கொலை,கொள்ளை,கற்பழிப்பால்தான் நீ இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாய்...ஆம்,இரண்டாம் உலக யுத்தம் நடக்கவில்லை என்றால் உன் தகப்பன் பர்மாவிலிருந்து சென்னை வந்திருக்கமாட்டார்.அவர் பர்மாவில் பார்த்த பெண்னை மணந்திருந்தால்,அவருக்கு பிறந்த மகன்,அதாவது நீ குருடனாக பிறந்திருப்பாய்"
"என் கண்பார்வைக்கு விலை ஐந்துகோடி உயிர்களா?எனக்கு கண்பார்வை வேண்டாம்" என்றான் சீடன்.
"அப்படியானால் வரலாற்றை மாற்று" என்றார் குரு.
நொடிநேரத்தில் சீடன் 1890 ஆம் ஆண்டின் ஆஸ்த்ரியாவில் ஹிட்லர் சிறுவனாக விளையாடிகொண்டிருந்த காட்டுக்குக்கு போனான்.அதோ இளம் வயது அடால்ப் ஹிட்லர் பாம்பு புற்றில் கைவிட போகிறான்.அருகே சீடன் நிற்கிறான்...
"அவனை நீ தடுக்காவிட்டால் அவன் இறந்துவிடுவான்" என்றார் அசரீரியாக குரு."அப்புறம் உலக போர் நடக்காது. ஆனால் உனக்கு கண்பார்வை போய்விடும்"
சீடனின் உடல் நடுங்கியது.
ஹிட்லர் பாம்புபுற்றில் கை விட்டான்.
"நில், நில்" என அலறினான் சீடன்.
கண் விழித்தான்.கண்பார்வை நன்றாக இருந்தது.
"நீ கத்தியதால் ஐந்து கோடி உயிர்கள் போய்விட்டன.அதில் பலர் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டனர்" என்றார் குரு.
"கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஆனால் எனக்கு கண்பார்வை போயிருந்தால் இன்னமும் வருத்தமாக இருந்திருக்கும்" என்றான் சீடன்.
சீடனும் குருவும் மீண்டும் கானகத்தின் ஊடே நடக்க துவங்கினர்.

காபி

coffee.jpeg
கவிஞரின்
சந்தக் கவிதை ஓசையையும்
தனித்தே இனித்த நயத்தினையும்
அவரோடு களித்த போது
அவரது தலைசிறந்த படைப்பான
கவிதை நடந்து வந்தது
கையில் காப்பியோடு . . .

கமலஹாசனின் கவிதைகள்

மீண்டும் உனக்கொரு கடிதம்.

சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.
உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற
காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.
காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது.
பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும்இருக்க வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பதுஉண்மை.
ஆள் மாறினாலும்இல்லாள் மாறினாலும்
காதல்மாறுவதில்லை.
கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்
இருவேறு நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.
நமது ஆறாவது உணர்வைபோற்று.
பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்றஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து வருவதைஉணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து
கவிதையை வைக்கிறார்கள்.
நான் காதலன் கவிஞன் ஆதலால்
காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல்
விட்டிருப்பதுவிபத்தல்ல நீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே
யிருக்கிறாய் நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!
-கமல்ஹாசன்


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை
நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே
வெவ்வேறு பாதைகள்!அவற்றில்,
எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம்,
விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,
இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.


தமிழ் மகளுக்கு

தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாதிந்த சாதி ஜுரம்.
கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது
வியாதியில் வந்து முடிந்தது காண்

காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண்

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிர மாண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண்

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்
சாதியுஞ் சாமியும் சாராயம் போல்
சந்தைக் கடையில் விற்குது காண்

சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண்

புத்தன் சொன்ன தம்ம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண்

வாழ்க நற்றமிழர் . . .


user posted image
துணிக் கடைத் திறப்பு விழா. . .!
சிறப்பு விருந்தினர்
துணியே இல்லாத நடிகை !
திறப்பு விழா என்பதால்
அவர் வருகை திறந்த நெஞ்சோடு . . .
ஆராவது மூடு விழா
அழையுங்களேன் . . .!
இவர்கள் பேட்டி
மடைதிறந்த்துபோல் – இல்லை எனினும்
உடை திறந்த்துபோல் நிச்சயம் இருக்கும்.!
திறப்பு விழாவின் போது
ரிப்பன் வெட்டிய நடிகை கேட்டார்.
‘ரிப்பன் என்குத்தானே . . .!’
உங்களுக்குத்தான் மேம் !
நாளை உடை தைக்க
உபயோகப் படும் !
அன்று சாலையில் இயற்கை மாற்றம்.
புது ந்தி ஒன்று பிரவகித்த்து,
ஜொள் ந்தி . . .
வாழ்க ஜொள்ளர்கள் !
என்ன கூட்டம்
என ஒதுக்க வந்த டிராபிக் போலீஸ்
இரண்டாம் உயிர் எழுத்தை வாயில் திறக்க
நாலாம் உயிர் எழுத்து உள்ளே போய்ப் பறந்தது.!
நடுநாயகமாய் குத்துவிளக்கு. . .!
இலக்குமியைத் தீண்டிப் பழகியது அது
என்ன பாவம் செய்த்தோ இன்று,
உயிர் இருந்தால் தன்னைத்தானே
குத்திக் கொண்டிருக்கும். . .
அதனால்தான் குத்து விளக்கா ?
பேசாமல்
நடிகை வீட்டு நாயையும்
சட்டை அணிவித்து
திறப்பு விழாவுக்குக் கூப்பிட்டிருக்கலாம் . . .!
அதாவது கொஞ்சம் நாணப் பட்டிருக்கும்.
நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். . .!
நடிகைக்கு வேண்டுமாம் என
ஏன் சொல்லாது விட்டாய் பாரதீ . . .?
அந்தக் கூட்டத்தில் நல்லா டிரஸ் பண்ணி
போர்த்திக் கொண்டு வெட்கப் பட்ட சீவன்கள்
துணிக்கடைப் பொம்மைகள் மட்டுமே . . .!
திறந்த மனசோடு எல்லோர்க்கும்
திவ்ய தரிசனம்.
பேருந்துகள் கூட அன்று அங்கே நின்றே சென்றன.
user posted image
பேயாட பிசாசாட – நடன நிகழ்ச்சியில்
வாராவாரம் இரசித்த்து 2D – தரிசனம்.
இது 3 D – ஜென்ம சாபல்யம் !
மேம்மிடம் நிறையப்பேர் கைஎழுத்து வாங்கினர்.
சிலர் நெஞ்சில், சிலர் உள்ளங் கையில்,
சிலர் ரூபாய் நோட்டுக்களில் . . .
இவர்கள் கொஞ்சநாள் குளிக்க மாட்டார்கள்,
கழுவ மாட்டார்கள். . .
நாளை அந்த ரூபாய் நோட்டு
நல்ல ரேட்டுக்கு ஏராளமாய் ஏலம் போகும் . . .!
மேம்க்கு ரெம்ப ஆசை
தன் இரசிகர்கள்
தனக்குக் கோவில் கட்ட வேணும் என்று . . .
கோவிலில் கற்சிற்பம் இருக்கும்
அதை உறுதி செய்ய
நிறையப் பேர் மேம்மைத்
தொட்டு எல்லாம் பார்த்து
பிறவிப் பயனை அடைந்தார்கள் . . .!
அந்தக் காலத்தில் ஏதாவது மா நாய்க வணிகன்
பூம்புகாரில் உள்ள நாளங்காடிக் கடையைத்
தாசி அபரஞ்சியை வைத்துத்
திறந்திருப்பார் . . .!
இன்று இங்கே இவர்கள் இப்படி !
மனிதர்கள் மாறவே இல்லை !
நீதான் ஸாரதி ஆயிற்றே !
ஏ, வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா . . .!
இவர்களைப் பத்திக் கொண்டு போ கடல் வரை !
அங்கே தள்ளி மந்தார மலையைத் தூக்கி
அமுக்கி ஒரு கடை கடை !
இனியேனும் இப்படிஎல்லாம் திறவார் ஒரு கடை ! !

காதல் கவிதைகள் - 1

1 .அதிஷ்ட்டம்


அதிஷ்ட்டம்
இலாட்டரியில்
விழுந்தால்தான் என்றில்லை . . .

காற்றில் அலையும் நின்
கூந்தல் முடி ஒன்று
கையில் விழுந்தாலும்தான் . . .!

2.ஆதலால்


user posted image
நீ படித்துப்
பரிசு தந்த கவிதைப் புத்தகம்
ஏன் இனிக்கிறது விசேஷமாய் ?
புதுப் பிரதியின்
ஒட்டிய பக்கம் பிரிக்கப்
பனிமொழி நின்  வாய் ஈரம்
பட்டிருக்கும் ஆதலால் . . .!

3.சிரி

திங்கள் மல்லிச் சரம்
செவ்வாய் பிச்சிச் சரம்
புதன் முல்லைச் சரம் -

என ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பூச்சூடி வரும் பெண்ணே ?
இன்று புதன் . . .
வெறுந் தலையோடு வந்து விட்டாய்
ஏமாற்றி விட்டுப் போவாதே!
கொஞ்சம் சிரித்துவிட்டுப் போ !

4.யுரேகா . . . !

நீச்சல் குளத்தில்
அமிழ்ந்து குளித்த போது
உன்னால் இடம் பெயர்ந்த
நீரின் அளவு. . .

இரயில் நிலையத்தில்
எடை பார்க்கும் எந்திரத்தில் நின்ற போது
உன் எடை
சும்மா இராமல் இரண்டையும் வகுத்த போது
ஆச்சரியம்.
இதென்ன விடை 13.6 . . .?
இதுவா மனித உடலின் அடர்த்தி எண் என
ஆவலை அடக்க முடியாமல் புத்தகம் புரட்டினால்
அடர்த்தி எண் 13.6 க்கு நேரே
போட்டிருந்தது தங்கம் என . . .

Tuesday, January 19, 2010

பார்வைகள் பலவிதம்




ரெண்டு ஷூக்குள்ள எப்படித்தான் மூணு கால விட முடியுதோ?




அடேயப்பா முயற்சி திருவினையாக்குமா?




பெண் நாணல் போன்றவள் என்று சொல்வது உண்மைதான்..
எங்க இருந்து போட்டாலும் கரெக்டா போடுவோமுல




தலை சுத்துதுன்னு சொன்னா இதுதான் அர்த்தமா ?





மற்றவர்களோடு ஒத்து போவதில் பெண்களை மிஞ்ச முடியுமா?




எவ்வளவு பெரிய கை ..



என்னாது இது?? ..ஒரே குழப்பமா இருக்கே

எதிர்பாராத திருப்பம்

கழுத்தில் புது மஞ்சள் சரடு மின்ன ,கணவன் செந்திலோடு ஒட்டி நடந்தாள் சுந்தரி.நேற்றுதான் திருமணம் நடந்தது.ஈவின்ங் ஷோவிற்கு இரண்டு டிக்கெட்களை எடுத்துக்கொண்டு ,சுந்தரியை உரசியபடியே நடந்தான் செந்தில்.அவளுடைய சரிகை நெய்த அரக்கு கலர் சேலை அவனுடைய கைகளில் உரசி,அவனை கிறங்க வைத்தது.அவளிடமிருந்து வந்த மல்லிகை மணமும் , மஞ்சள் மணமும் அவனை மோகக்கடலில் மூழ்கச்செய்தன. வீட்டிலேயெ இருந்திருக்கலாமோ என்று அடிக்கடி அவனது உள்மனது கூறியது. சுந்தரியுடன் நடந்து செல்வதே அவனுக்கு சொர்க்கத்தில் நடப்பது போலிருந்தது.தியேட்டருக்குள் நுழைந்ததும் அவளின் மெல்லிய விரல்களோடு தன் கைகளை பிணைத்து கொண்டான்.சுந்தரி கைகளை வெட்கத்துடன் விடுவிக்க முயன்றாள்.உடனே கைகளின் இறுக்கத்தை அதிகபடுத்தினான் செந்தில்.சுந்தரியின் முகம் நாணத்தில் சிவந்து இருட்டில் கூட ஒளி காட்டியது.
                இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
திரைப்படம் ஓடுவதையே மறந்து இருவரும் ஒருவரையொருவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தப்பட்டனர்.பாடல் காட்சிகளின்போது அவளுடைய கைவிரல்களோடு நாட்டியமாடினான் செந்தில்.சுந்தரி வெட்கத்துடன் கையை விடுவித்துக்கொண்டாள்.
“ஏன்??”-செந்தில்.
“யாராவது பார்க்கபோறாங்க!”-சுந்தரி
“பார்க்கட்டுமே..அதுக்குத்தான் உன் கழுத்துல நான் கட்டின லைசென்ஸ் இருக்கே! “ - செந்தில்.
“அதுக்காக தியேட்டர்லயா?? “ - சுந்தரி.
“அப்போ வீட்டுல வச்சுக்கலாமா ! ம் சொல்லு “ என்று குறும்புடன் கேட்டான் செந்தில்.

கன்னம் சிவந்து நாணத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்தாள் சுந்தரி. பூக்களை வருடும் இளங்காற்றாக அவளுடைய தலையை கோதினான் செந்தில்.சின்ன சின்ன சீண்டல்களிலும் தீண்டல்களிலும் உலகை மறந்தனர்.படத்தின் கதை என்ன என்பது கூட அறியாமல்,திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.மூன்று மணிநேரம் மூன்று நொடிகளாய் மாறிப்போனதை நினைத்து இருவருமே வருந்தினர்.

“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.

ஆல் மச்சான்ஸ் அலர்ட்!

மின்னுறதெல்லாம் பொன்னல்ல… பண்ணுறதெல்லாம் லவ் இல்ல!
                                        Cats In Love
மாட்டிருச்சு ஃபிகருன்னு மயக்க பிஸ்கட் சாப்பிட்டு அலையாத. ‘நாங்க காதல்ல ஜெயிச்சு, வாழ்க்கையிலயும் ஜெயிச்சுக் காட்றோம்!’னு ‘பாய்ஸ்’ சித்தார்த் ஜெனிலியா மாதிரி டயலாக் விட்டா போதுமா? மொதல்ல லவ்ல ரீல் எது? ரியல் எதுன்னு தெரிஞ்சுக்கோ… உண்மையைப் படிச்சுப் புரிஞ்சுக்கோ!உஷாரா இருக்கணும்கிறதுதான் முதல் படி. ஒரு பார்வைக்கே, ஒன்பது பல்டி அடிக்கிறதை நிறுத்து. லேசா ஃபிகரு தலையைச் சாய்ச்சுப் பார்த்தா, பாஸாகிட்டோம்னு டூயட்டுக்குக் கிளம்பிராத. போற போக்குல ஒரு லுக் விட்டதுக்கே, ஆரார் வாசிக்க ஏ.ஆரைத் தேடுற பாரு… அங்கதான் ஆரம்பிக்குது அல்வா வரலாறு. அவ பார்க்கும்போது, லேசா புருவத்தை டான்ஸ் ஆட விட்டுட்டாள்னா, போச்சு… காதல்னே கன்ஃபார்ம் பண்ணிருவல்ல… வேணாம்டா. ஏன்னா, பொண்ணுங்க பார்வைங்கிறது புயல் பூமியில ஹெலிகாப்டர்ல சாப்பாடுப் பொட்டலம் போடுற மாதிரி. வாழ்க்கைக்குத் தேறாது! எடுத்ததுக்கெல்லாம் பன்ச் டயலாக் அடிக்கிறானா அவன்? ஒரு வாரத்துலயே ‘நீ இல்லைன்னா, நான் செத்துருவேன்’ங்கிறது, ‘எப்போ உன்னைப் பார்த்தேனோ, அப்பவே உன்னோட வாழ ஆரம்பிச்சுட்டேன், நமக்கு இப்போ ஒரு குட்டிப் பாப்பா இருக்கு தெரியுமா?’ங்கிறவனையெல்லாம் நம்பவே கூடாது. எடுத்ததுமே, சம் டெக்ஸ்ட் மிஸ்ஸிங்னு எட்டுத்துண்டா மெசேஜ் அனுப்பறது, ‘இதான் நீ… இதான் நான்!’னு முத்தம் குடுக்குற முயல் குட்டிங்க பிக்சர் மெசேஜ் அனுப்புற எமோஷனல் பார்ட்டிகளைக் கொஞ்சம் வெயிட்டிங்லயே வெச்சிருக்கிறது நல்லது!சினிமா கிறுக்குல ஃபீலிங் ஃபிலிம் காட்றவங்ககிட்ட அலர்ட்டா இருக்கணும். ‘அலை பாயுதே’ பார்த்த அன்னிக்கே, ‘வா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்!’னு துப்பட்டாவைப் பிடிச்சு இழுப்பான். ‘7 ஜி’ பார்த்துட்டு, ‘ஒரு தடவை உன்னை எனக்கு முழுசா தந்துடுறியா?’ன்னு கேட்பான். ‘கற்றது தமிழ்’ பார்த்துட்டு, ‘நிஜமாத்தான் சொல்றியா?’னு திரியுற பில்ட்அப் ஃபீலர்களை நல்லா வாட்ச் பண்ணியே ஆகணும்!
எப்போ பார்த்தாலும், ‘இப்போதான் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். பிரசாதம் எடுத்துக்க. உனக்கு கோல்ட் சரியாகணும்னு வேண்டிக்கிட்டேன். காலையில அம்மாவுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணேம்ப்பா. இட்லி எடுத்தப்போ கை சுட்ருச்சு. தாத்தாவுக்கு பவர் செக் பண்ணி கிளாஸ் வாங்கிட்டுப் போகணும்ப்பா. தம்பியை நினைச்சா கவலையா இருக்கு. அன்னிக்கு வீட்டுக்கு வந்தான். ஒரே சிகரெட் ஸ்மெல். மூணாறுல இருந்து எங்க ஆன்ட்டி வந்திருக்காங்க. நைட் அவங்களுக்கு கீதை படிச்சுக் காமிச்சுட்டு இருந்தேனா. ரொம்ப லேட் ஆகிடுச்சு’ன்னு மானாவாரியா ஓவர் டோஸ் ஹோம்லி ஷோ ஓட்டினா, நம்பிடாத. அதுக்கு ஒரு பயங்கரமான ‘பாட்ஷா’ முகமும் இருக்கும். எங்கேயாவது பர்த் டே பார்ட்டியில ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து, உன் ஆளு தம்மைப் போட்டு டான்ஸ் பண்றதைப் பார்த்தா தெரியும்டி!
பக்கத்துல நீ இருக்கும்போது, பர்ஸைத் திறந்து நாலஞ்சு கிரெடிட் கார்டுகளைச் சும்மாவே எடுத்து வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பான். (அம்புட்டும் கேன்சலானதா இருக்கும்). கொஞ்சம் தள்ளி நின்னு சத்தமா, ‘உன் ஃபீல் புரியுது திவ்யா. பட்… எனக்கு வரலியே. அதுவா தோணணும். நமக்குன்னு ஒருத்தி இவதான்னு தோணணும். இதுவரைக்கும் தோணலிலயே!’னு மொபைல்ல பேசுவான் (அந்தப் பக்கம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கிற போன் ஃப்ரெண்ட் கொலை வெறி டென்ஷன் ஆவான்). ஓட்டலுக்கு அழைச்சுட்டுப் போய், ‘எனக்கு வரப்போற ஒய்ஃபுக்காக ஒரு பீச் ஹவுஸ் கட்டணும். ரெண்டு பேரும் ஈவினிங் பீச்ல கை கோத்து நடக்கணும். குட்டியா ஒரு கார். மாசத்துக்கு ஒரு அவுட்டிங். பிறக்கப் போற குழந்தைக்கு, அவங்க தாத்தா பாட்டியோட பேரு. இப்படி எனக்கும் ஆசைகள் இருக்கு!’ன்னு உன் கண்ணைப் பார்த்துக்கிட்டே நான்ஸ்டாப்பா ஃபீல் பண்றானா? அந்த ட்ரீமிங் தலையனுங்க சகவாசமே வேணாம்!
‘ப்ராமிஸா இனி தண்ணியே அடிக்க மாட்டேன். உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு பூஜா!’ன்னு தண்ணி அடிச்சுட்டு போன் பண்ணுறானா? பக்கத்துல நீ இருக்கும்போது, எதிர்க்க கலர் கலரா ஃபிகர்ஸ் வந்தா, யு டர்ன் போட்டு மரத்தை வெறிக்கிறானா? கிராஸ் பண்ணும்போது, சிகரெட்டைக் கீழே போட்டு மிதிச்சுட்டு, ‘ச்சே இந்த சனியனை இனிமே பிடிக்கவே கூடாது’னு சத்தமாச் சொல்றானா? ‘ஸாரி, நேத்து ஜுவாலஜி கிளாஸ்ல தலைவலிக்குதுன்னு தூங்கிட்டேன். நோட்ஸ் தர முடியுமா?’னு ஏதாச்சும் கேட்கிறானா? பஸ்ல டிக்கெட் பாஸிங்குக்கு எகிறி எகிறி ஹெல்ப் பண்றது, கூட நடக்கும்போது, பிச்சைக்காரருக்கு டென் ருபீஸ் போடுறது, வயசானவங்களைத் தரதரன்னு இழுத்து ரோடு கிராஸ் பண்ணிவிடுறதுனு சமூக சேவை பில்ட்அப்பா கொடுக்கிறானா? இதெல்லாம் இவன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல இருக்கே என நம்பவைக்க பையன் போடுற காதல் டிராமா. கவனமா இருக்கணும் கண்ணு!

எனக்கு பிடித்த குட்டி கதைகள் - 3

ஆ...

மீண்டும் மீண்டும்
“ஆ....அம்மா”
அவன் மீது பைக் விழுந்து கிடந்தது.இடதுகை எலும்பு முறிந்து ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.ரத்த போக்கு அதிகம் என்பதால் மெல்ல அவன் சுயநினைவுகளை இழந்து கொண்டிருந்தான்.அவனுக்கு அதிகபட்சம் இருபது வயதிருக்கலாம்.போட்டிருந்த தங்க பிரேஸ்லெட்டும் கழுத்து ஒட்டிய மைனர் செயினும் அவனை நடுத்தரக் குடும்பத்திற்கும் மேலே என காட்டியது.
அலரல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டின் வேலைக்காரன் ஓடி வந்தான்.
“இந்த காலத்து பையன்களுக்கு பைக் ஓட்டினா கண்ணு மண்ணு தெரியரதேயில்ல”, அந்த நிலையிலும் இளைஞனை திட்டிக் கொண்டே உதவிக்கு சிலரை அழைத்தான்.ஆட்டோ மூலம் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு அவனுக்கு நினைவு திரும்பியதும் அவனுடைய வீட்டிற்கும் தகவல் அனுப்ப பட்டது.
மூன்று மாதங்கள் கழித்து...
“பைக் எடுத்துக் கிட்டு போரதா இருந்தா கவணமா போ. முன்னாடி நடந்த சம்பவத்த நினைவுல வைச்சுக்கோ”, அப்பாவின் அட்வைஸ் மழையில் அவன் நனைந்து கொண்டிருக்கும் போதே அம்மா குறுக்கிட்டாள்.
“பையன் பிழைச்சு வந்ததே பெருமால் புண்ணியமுன்னு, நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கிட்டு இருக்கேன்.நீங்க என்னாடானா அவனை எப்ப்பார்த்தாலும் கரிச்சு கொட்டிக் கிட்டு இருக்கீங்க.”
“பையன் புது பைக் ஓட்டரத பார்த்து யார் யாரெல்லாம் பொறாமை பட்டாங்களோ, நீ இப்படி திரும்புடா” கையிலிருந்ததினை கொண்டு அவனுக்கு திருஷ்டி சுற்றினாள்.
“அம்மா, என்னாம்மா இதெல்லாம், இப்ப எதுக்கு தேவையில்லாம“
“அவ சொன்னா கேட்கமாட்டா டா”
“பொறுப்புள்ள அப்பா மாதிரி என்னைக்காவுது பேசறிங்களா”, அம்மா சலித்துக் கொண்டாள். அப்பா அவரின் அறைக்குச் சென்றார்.
சிறிது நேரத்தில் அந்த பெரிய வீட்டின் வாசல் முன்பு பூசணிக்காய் சிதறிக்கிடந்தது.
(கதையை முதலிலிருந்து படிக்கவும்).

Sunday, January 17, 2010

Tamil Books Download Option

தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக

500+ EBooks in Tamil for Free Download

 http://www.tamilcafe.net/tamilbooks.html.

படித்து மகிழுங்கள்.

Sunday, January 10, 2010

சுகப் பிரசவம்!......

“வலி வரலைன்னா
சொல்லும்மா சிசேரியன்
பண்ணிடலாம்”
-கேட்ட மருத்துவரிடம்,
வேண்டாமென மறுத்துவிட்டேன்!

பெத்தவருக்கு தான்
பெருஞ்செலவு ஆகுமென்று!

வலியை வரவழைக்க
வலிய முயன்றேன்!

எனிமா ஏற்று
குடலை சுத்தமாக்கி,

புடவை அவிழ்த்து
இரவுடை தரித்து,

முக்கத் தொடங்கினேன்
கட்டிலில் படுத்து!

பற்றிக்கொள்ளத் துணையைத் தேடி
கட்டில் கம்பியைப் பற்றிக்கொண்டு,
விழிகளைப் பிதுக்கி,
பல்லைக் கடித்து,
அடிவயிறு உப்பி,
கால்களை உதறி,
முக்கி முக்கி,
உந்தி உந்தி
தள்ளுகிறேன் ஓர் உயிரை,
உலகைக் காண!

முகமெல்லாம் வியர்த்து,
உடல் தளர்ந்து,
உள்ளமும் சோர்ந்து,

உள்ளே, செத்துப்
பிழைத்தேன், நான்!

வெளியே, சொன்னார்கள்:
“சுக“ப் பிரசவம் என்று!.........

யார் நீ? .......

எங்கிருக்கிறாய்… என்னவளே….

யார் நீ?
எப்படி இருப்பாய்?
ஒல்லிக்குச்சியா?
பூசணிக்காயா?
பனைமரமா?
குள்ளக் கத்தரிக்காயா?

ஆனால்
நிச்சயமாய் கேள்விக்குறிகளின்
நிரந்தரப் பதிலாய்…
பெண்ணாய்,
பெண்ணியத்தோடு…

தோள்களில் சாய்ந்தும்,
தலைமுடியைக் கோதியும்,
மூக்கோடு மூக்கை உரசியும்,
என் உயிரைப் பிழியப்போகின்றாய்…

தனிமையை…
அழுகையை…
அன்பை…
ஆண்மையை….
முழுமையாய் ஆக்கிரமிக்கப் போகின்றாய்..

நம் சிசுவை வயிற்றிலும்,
உன் நினைவுகளை என் இதயத்திலும்
பாரமின்றி நிரப்பப்போகின்றாய்…

நினைக்க… நினைக்க
இனித்தாலும்…

தொட்டிக்குள் நீந்தும்
மீனைப் போல

உன்னையே சுற்றும் என்
கற்பனைத் தாளில்

ஏனோ நீ மட்டும்
விவரிக்கப்படாத விபரமாய்…

நானோ கிறுக்கப்படாத
வெற்றுக் காகிதமாய்…

முகம் தெரியாத உனக்காக,
முகவரி இடப்படாத
வாழ்த்து அட்டைகள்,
பரிசுப் பொருட்கள்…
கூடவே நானும்.......

படித்தவை [பிடித்தவை]-1

1.சீக்கிரம் வந்துவிட்ட தந்தை
  அரைப்பரீட்சையில் தேராத
  மதிப்பெண் அட்டையுடன் நான்.

2.எப்படி சொல்வது
தனிக்குடித்தனம் போவதை
உடம்பு சரியில்லையாவென கேட்கும் தாய்......

3.இரவு நீண்டுகொண்டே
இருக்கிறது, கையில்
கொடுக்கவிருக்கும் காதல் கடிதம்.

4.பிச்சைக் காரர்
அருவருப்பு, வெட்கம்
துறந்த ஒருவகைத்
துறவிகள்.

5.மருத்துவர்
கண்ணுக்குத் தெரிந்த
கடவுள்கள் - வழக்கம்போல்
காசு வாங்கிக் கொண்டு.

6.கனவு
சேகரிக்க மறந்த
சம்பவங்களின்
தொகுப்பு.

7.விவாதம்
முடிவுகளைத்
திணிக்க முயலும்
அமைதிப் போராட்டம்.

கண்ணால் கண்ட காதல் சம்பவம்



கல்லூரியில்,படித்துக்கொண்டிருந்தபொழுது என் நண்பன் இன்னொரு பிரிவைச்சார்ந்த அமி என்ற பெண்ணின் மீது அவனுடைய காதல் வகுப்புத் தோழிகளின் ஆதரவுகளோடு அமோகமாக வளர்ந்தது.

முதலில் அந்தப் பெண்ணின் பெயரை காதலிக்க ஆரம்பித்தான். பின் அவள் உயிரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான்.அவளின் பிறந்தநாளுக்கு கவிதைகள் வாழ்த்து அட்டைகள் ரோஜாப்பூக்கள் என களை கட்டியது.


- காதல்
வாழ்த்து அட்டை வியாபாரியை..
வாழ வைக்கிறது!
ரோஜாப்பூக்களை..
குடிசைத்தொழிலாக்குகிறது!

அந்தப்பெண்ணனின் வீட்டிற்கு சென்று அவளது தாயாரின் கருணையையும் மதிப்பையும் பெற்று சுமுகமாய் வளர்ந்த அந்தக்காதல் கடைசியில் அந்தப்பெண்ணிற்கு வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையின் வடிவில் வந்தது அவர்களது காதலின் எதிரி.


"நீ நாங்கள் சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் " என்று அவர்களது பெற்றோர் மிரட்டினார்களா என்று தெரியவில்லை ஆனால் அந்தப்பெண் கடைசியில் மனசு மாறிவிட்டாள்.

நாங்களும் கடைசி வரை போராடினோம் . அந்தப்பெண்ணின் உறவினர் ஒருவரிடம் அந்தப்பெண்ணிற்கு விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்கள்தான் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நிலைமையை விளக்கி அந்த உறவினரையும் அழைத்துச் சென்று எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் பொழுது
"அவனை நான் காதலிக்கவே இல்லை ச்சும்மா ப்ரண்ட்சிப்தான்" என்று சொல்லிவிட்டாள்.
அந்தக்கடுப்பில்தான் நான் எழுதினேன் ஒரு கவிதை..

காதல் யாரையும் ஏமாற்றுவதில்லை
ஆனால்
காதலிகள்தான்..


அதன் பிறகுதான் உணர்ந்தேன். அவனது காதலி அவனை ஏமாற்றிவிட்டதற்காக எல்லோரையும் நாம் குறைகூறக் கூடாது என்று. எத்தனையோ காதலர்கள் காதலித்து பெண்களை ஏமாற்றிவிட காதலிகள் - காதலன் வீட்டுமுன் போராட்டம் என்று எத்துணை செய்திகளில் படித்திருக்கின்றோம்

கடைசியில் எனது நண்பன் எனக்கு ஒரு கடிதமும் தனது காதலிக்கு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்று தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டான். நல்லவேளை அவனது தாய் உடனே கவனித்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டார்கள்.

தற்கொலையைப்போல
இழிவான செயல் எதுவுமில்லை
ஆகவே
காதலிக்காதீர்கள்

பின்னர் தந்தையின் சுடுசொற்களுக்கு இடையேயும் சமுதாயத்தின் பழிசொற்களுக்குpடையேயும் தடுமாறி போராடி வெற்றி பெற்று தற்பொழுது சென்னையில் வெப் டிசைனராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான். உலக நாடுகளிலிருக்கும் பல நிறுவனங்களுக்கு Freelancer webdesigner - ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான்.

என்னால் இன்னமும் மறக்கமுடியாது என்னிடம் அவன் இப்படி புலம்பியதை :

"டேய் அவ இப்பவும் விதவையாய் வந்தால் கூட நான் ஏற்றுக்கொள்வேன்டா.."

'பாருங்க..எந்த அளவுக்கு அந்தப் பெண்ணை காதலித்திருப்பான் அவன்.? ஆனால் இப்படி ஏமாத்திட்டுப் போயிட்டாளே அவள்..'

அதுவும் நல்லதுக்குத்தான். இறைவன் ஒரு சோகத்தை கொடுத்து கெட்டவர்களையும் நல்லவர்களையும் எனது நண்பனுக்கு அடையாளம் காட்டிவிட்டான்.

காதலிக்கு கல்யாணம்
இவன்
காதல் விதவையானது

எனது நண்பன் ஜகூபாவுக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. என்ன ஒரு ஆச்சர்யமென்றால் எந்தப் பெயரை விரும்பி அந்தப்பெண்ணைக் காதலித்தானோ அதே பெயருள்ள பெண்ணே இவனுக்கு மனைவியாக அமையப்போகின்றாள்.

செங்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூரில் செட்டிலான ஒரு குடும்பத்தில் இருந்து அவன் விரும்பிய பெயர் கொண்டவளே உயிர் நிரப்ப வரப்போகிறாள். இப்போது அவளோடு இணையத்தில் இதயத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றான்.

ஆனால் நான் இன்னமும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். எவ்வளவு தீவிரமாய் எனது நண்பனைக் காதலித்த அந்தப்பெண் கடைசி நேரத்தில் மனம் மாறிய காரணம் என்ன..? பலவந்தமா இல்லை பணபந்தமா?

பெயரைக் காதலித்து - அவளின்
உயிரைக் காதலித்தான்
அவளோ
பெயருக்கு காதலித்துவிட்டு
உயிரைப் பறிக்க நினைத்தாள்.........

அயல்தேசத்து கவிதை.......


மீண்டும் அயல்தேசத்திற்கு
தினமும் என்னை அழவைக்கும் கவிதை


தூக்கம் விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகின்றது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலே ...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயனத்தூனூடே
விற்றுவிட்டு

கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மர உச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்கமுடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை

அதையும் பறிக்கும் ஒவர்டைம்கள்

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த,அப்பாவின் திட்டுடன் எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து கவிதை......   

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்

அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்!


இறுதிநாள் நம்மிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப்பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
றியாழும் தினாரும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ?

ஓவ்வொறு முறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்றகுழந்தையின்
வித்தியாசப்பார்வை...
நெருங்கியவர்களின்... திடீர்மறைவு

இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
வீட்டு கஷ்டங்களும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு...........

இதற்க்கு பெயர்தான் " வெட்கமோ ".......


" வைரமுத்துவின் " காதலித்துப்பார்.........



Tuesday, January 5, 2010

எனக்கு பிடித்த குட்டி கதைகள் - 2

காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது

இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். 'நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே' என்றான் அவன்.

எனக்கு பிடித்த குட்டி கதைகள் - 1

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.
"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

சூடான கவிதை - 1

தற்கொலை
-----------------
என் காதலி ஓடி போனால்
என் நண்பனோடு
நான் சாக போகிறேன்.









என்னால் இனி உயிர்வாழ முடியாது
என் நண்பன் இல்லாமல்......................!

Monday, January 4, 2010

Who Am I

 யாரு இவரு? தெரிஞ்சா மின்னஞ்சல் பண்ணுங்க 



வயது வந்தவர்களுக்கு மட்டும்..

தயவு செய்து 18 வயதுக்கு குறைந்தவர்கள் இத்தளத்தைப் பார்வையிட வேண்டாம். பொறுமையை சோதிக்கும் தளம். தளத்திற்குள் நுழைந்ததும் ஏண்டா வந்தோம் என்று இருக்கும்.
நண்பர்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும் பரிந்துரைக்கும் வசதியுடன் உள்ள இணைய தளம். விரும்பினால் இதுபோன்ற அனுபவத்தை இப்பதிவில் பின்னூட்டலாம்

நல்ல ஐடியா!

பேரூந்துகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் Footboard தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க முடியவில்லை. "ஏய் பொறம்போக்கு மேலே வா" என்று அன்பாகச் சொன்னாலும் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதிலிருக்கும் த்ரில் வேறெதிலும் இல்லை. தமிழக அரசும் என்னென்னவோ செய்து பார்த்து கடைசியில் சோதனை அடிப்படையில் படத்திலுள்ளவாறு பேரூந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது.



முன்னாள் மாணவன்: அப்படியே அந்தக் கைப்பிடியையும் எடுத்துவிடால் நல்லது:-)

டி.ராஜேந்தரை என்ன சொல்லித் திட்டியிருப்பார்கள்?


சி்ன்னசேலம் ரயில் நிலையத்தில் மனைவி உஷாவை ரயிலில் அனுப்புவதற்காக சென்றபோது லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தரை திட்டி மிரட்டிய தேமுதிகவைச் சேர்ந்த 6பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷாவை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தார்.


இதற்காக சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார்.பிளாட்பாரத்தில் நடந்து போன போது, திடீரென அங்கு வந்த சின்னசேலம் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, குமார், கோபிநாத், சூரியன், தாமோதரன், அறிவழகன் உள்ளிட்டோர் சரமாரியாக ராஜேந்தரைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேந்தர் சின்னசேலம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது, குப்புசாமி மகன் சின்னசாமி, சின்னசேலம் பாண்டியன் மகன் குமார், சின்னப்பன் மகன் கோபிநாத், துரைசாமி மகன் சூரியன், அங்கமுத்து மகன் தாமோதரன், கோவிந்தன் மகன் அறிவழகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

Saturday, January 2, 2010

அடுத்தமாசம் கேன்சர் சரியாயிடும்.


சாப்பிட்டத் தட்டை தூரே
தூக்கி வீசி தொலைகாட்சியில்
புரூஸ்லியின் முஷ்டியை பதித்து...

எதிர்பட்ட தங்கைக்கு சனியன்
பட்டமளித்து, கீழே கிடந்த
வரலாற்றுப் புத்தகத்தை...

இயில்பின்றி கிழித்து
மின் விசிறிக்கும் மேலே
பறக்க விட்டு பெருமூச்சு விட்டு...

தம்பி பிறந்தநாள் பரிசை
கட்டை விரலால் நசுக்கி, குடி
தண்ணீர் குடத்தை எட்டி உதைத்து...

அலமாறியில் அடுக்கியிருந்த
அத்துனை துணிகளையும்
பார்த்த இடமெல்லாம் அள்ளிவீசி...

தேமேயென நின்றிருந்த மிதிவண்டியை
கீழே தள்ளி, பக்கத்து வீட்டுகாரர்
உட்பட அனைவரையும் சாடி...

கொதித்த நெஞ்சுடன் அமர்ந்த
என்னிடம் நெருங்கிய தந்தை
சொன்ன வார்த்தை இது...

”அடுத்தமுறை டூர் வந்தா போலான்டா
அப்பாவுக்கு அடுத்தமாசம் கேன்சர்
சரியாயிடும்” என்று இருமியபடியே...

நியாய விலை கடை

======================
இருக்கும் பொருட்களை
இல்லை என்று சொல்லி
பதுக்கி பணம் சேர்க்கும்
...
பசிக்கு உணவின்றி
பலர் தவிக்கும் வேளையிலும்
துளியும் கருணை இன்றி
அவர் உடைமை புசிக்கும்
....
பொய் கணக்கை
எழுதி வைத்து
பொய் பேசி திரியும்
....
இங்கே
பெயரில் மட்டுமே
இருக்கிறது
"நியாயம்"
-

நினைவுகள்


" குறைந்த பருவம் வரை தான்
அவளோடு என்று தெரியாமல் நேசித்தேன் ..
அவளை காணவே  பள்ளி சென்றேன் ...
அவள் கணக்கு சொல்லி தரும் போதே
நினைத்தேன் கவிழ்க்க போகிறாள் என்று ..
என்னவோ தெரியவில்லை - அவள்
பள்ளி வரவில்லை என்றால் மணமுடைந்து போகிறேன் ...
கோடை விடுமுறை ஏன்வந்தது - என்று
எண்ணி கொடையை திட்டுவேன்...
பள்ளி திறந்ததும் எல்லோரையும்
முந்திசென்று அவளிடம் சொல்வேன்

"GOOD MORNNING TEACHER" என்று ...."

கல்லறை வரிகள்

விலைமகளிர் கல்லறைகள்
*
கல்லறை ஒன்று-

படுப்பதை நினைக்கவே
பயமாகவும் அருவருப்பாகவும்
இவள் உணர்ந்ததால்
இவளின் விருப்பப்படியே
நிற்கும் நிலையிலேயே
புதைக்கப் பட்டிருக்கிறாள்.
*
கல்லறை இரண்டு-

இட நெருக்கடி காரணமாக
நாம் நிறைவேற்றாது விட்ட
இவளின் கடைசி ஆசை-
" என்னுடன் படுக்கையை
பங்கு போட்டவர்களையும்
சேர்த்தே புதைத்து விடுங்கள்"
*
கல்லறை மூன்று-

"தயவு செய்து என்னை
குப்புற புதைத்து விடுங்கள்"

ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை


ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
*
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
*
( ............ .............. ................. )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
*
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
*
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
*
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
*
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

*"நம்பிக்கை விற்பவன்" *

மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாத இடத்தில்
தன் சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,

பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,

"இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,

தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:

"உன் பெருமை உனக்குப் புரியலை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!"

நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.

இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;

உனக்கு சாப்பாடு போடுவதில்
சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா"

வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிளிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:

"ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!"