Wednesday, January 20, 2010

ஹைக்கூ

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை.....................

கொலைகள் நடப்பது உனக்காக


குருவும் சீடனும் கானகத்தில் மவுனமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.கானகத்தின் அழகை ரசித்துக்கொண்டே வந்தான் சீடன்.அந்த அழகை குலைப்பதுபோல் ஒரு பறவையின் அழுகுரல் கேட்டது.காட்டுப்பூனை ஒன்று அழகிய கிளி ஒன்றை பிடித்து குதறிக் கொண்டிருந்தது.
எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தார் குரு.கிளியை திரும்பி திரும்ப பார்த்தபடி நடந்தான் சீடன்.பிறகு ஏதோ யோசித்தான்.கல் ஒன்றை எடுத்து பூனையின் மீது எறிந்தான்.பூனை கிளியை விட்டது.கிளி தப்பி பறந்தது.
"உலக வரலாற்றை மாற்றி விட்டாய்"என்றார் குரு.மரத்தடியில் மவுனமாக அமர்ந்தார்.
"புரியவில்லை குருவே" என்றான் சீடன்.
"இன்னும் ஒரு மணிநேரம் இந்த இடத்தை விட்டு எழுவதில்லை என உறுதி அளிக்கிறாயா?" என்று கேட்டார் குரு.
"செய்கிறேன்" என வாக்குறுதி கொடுத்தான் சீடன்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.
45 நிமிடங்கள் கடந்தன.காற்றின் சலசலப்பை தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் கானகம் அமைதியாக இருந்தது.
"காப்பாற்றுங்கள்" என ஒரு பெண்ணின் ஓலம் கேட்க துவங்கியது.விரைவில் அந்த மரத்தடியை நோக்கி ஒரு பெண் ஓடிவந்தாள்.துரத்திக்கொண்டு இருவர் ஓடி வந்தனர்.அவளை பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றனர்.
சீடனின் உடல் நடுங்கியது.குருவை பரிதாபத்துடன் பார்த்தான்.
அவர் முகம் சலனமற்று இருந்தது.
"ஒரு அபலையின் வாழ்வை விட என் சத்தியமும், இந்த படிப்பும், துறவறமும் பெரிதல்ல" என்றான் சீடன்.எழுந்தான்.
"உலகை மாற்ற போகிறாய்" என்றார் குரு.
"ஆம்" என்றான் சீடன்.
"உன் மாற்றம் விளைவிக்க இருக்கும் விளைவை பார்" என்றார் குரு.
சீடன் கண் முன் எதிர்கால காட்சிகள் விரிந்தன.அவன் அந்த பெண்ணை காப்பாற்றுகிறான்.அவள் நன்றி கூறி தன் கணவனுடன் செல்கிறாள்.அவளுக்கு பிறக்கும் இரு மகன்கள் வளர்ந்து கொள்ளையராகின்றனர்.சீடனுக்கு பிறக்கவிருக்கும் மகளை கொடூரமாக பலாத்காரம் செய்து அவள் கணவனையும் குழந்தையையும் கொல்கின்றனர்....
பயத்தில் விறுவிறுத்த சீடன் கண்களை திறந்தான்.
"உலகை மாற்றுவதானால் மாற்று" என்றார் குரு.
"காப்பாற்றுங்கள்" என அலறினாள் அந்த பெண்.
தயக்கத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் சீடன்.
"அப்பா.நில்லுங்கள்.என்னை காப்பாற்றுங்கள்" என சீடனின் மகள் அலறும் காட்சி கேட்டது.
"குருவே, இதை என்னால் சகிக்க முடியவில்லை" என அலறினான் சீடன்.
"அப்படியானால் காப்பாற்று" என்றார் குரு.
சீடன் மவுனமாக நின்றான்.ரவுடிகள் அவளை பலாத்காரம் செய்து கொலை செய்வதை காண சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டான் சீடன்..அவன் கண்ணில் நீர் வழிந்தது.
அவன் கண்முன் வரும்காலம் விரிந்தது.அந்த பெண்ணின் கணவன் மனைவி இறந்த அதிர்ச்சியில் பைத்தியமாகிறான்.அவன் மகன்கள் இருவரும் அனாதையாகி உணவின்றி இறக்கின்றனர்.சீடனின் மகள் கணவனுடனும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.
"குருவே ஏன் இந்த துன்பம், ஏன் இந்த துயரம், ஏன் இந்த கொடூரம், ஒருவர் அழிவில்தான் மற்றவர் வாழவேண்டுமா?" என அழுதான் சிஷ்யன்.
"அனைத்தும் உனக்காகத்தான் சீடனே" என்றார் குரு."உலகில் இதுவரை நடந்த அனைத்து கொலை,கொள்ளை,கற்பழிப்பால்தான் நீ இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாய்...ஆம்,இரண்டாம் உலக யுத்தம் நடக்கவில்லை என்றால் உன் தகப்பன் பர்மாவிலிருந்து சென்னை வந்திருக்கமாட்டார்.அவர் பர்மாவில் பார்த்த பெண்னை மணந்திருந்தால்,அவருக்கு பிறந்த மகன்,அதாவது நீ குருடனாக பிறந்திருப்பாய்"
"என் கண்பார்வைக்கு விலை ஐந்துகோடி உயிர்களா?எனக்கு கண்பார்வை வேண்டாம்" என்றான் சீடன்.
"அப்படியானால் வரலாற்றை மாற்று" என்றார் குரு.
நொடிநேரத்தில் சீடன் 1890 ஆம் ஆண்டின் ஆஸ்த்ரியாவில் ஹிட்லர் சிறுவனாக விளையாடிகொண்டிருந்த காட்டுக்குக்கு போனான்.அதோ இளம் வயது அடால்ப் ஹிட்லர் பாம்பு புற்றில் கைவிட போகிறான்.அருகே சீடன் நிற்கிறான்...
"அவனை நீ தடுக்காவிட்டால் அவன் இறந்துவிடுவான்" என்றார் அசரீரியாக குரு."அப்புறம் உலக போர் நடக்காது. ஆனால் உனக்கு கண்பார்வை போய்விடும்"
சீடனின் உடல் நடுங்கியது.
ஹிட்லர் பாம்புபுற்றில் கை விட்டான்.
"நில், நில்" என அலறினான் சீடன்.
கண் விழித்தான்.கண்பார்வை நன்றாக இருந்தது.
"நீ கத்தியதால் ஐந்து கோடி உயிர்கள் போய்விட்டன.அதில் பலர் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டனர்" என்றார் குரு.
"கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஆனால் எனக்கு கண்பார்வை போயிருந்தால் இன்னமும் வருத்தமாக இருந்திருக்கும்" என்றான் சீடன்.
சீடனும் குருவும் மீண்டும் கானகத்தின் ஊடே நடக்க துவங்கினர்.

காபி

coffee.jpeg
கவிஞரின்
சந்தக் கவிதை ஓசையையும்
தனித்தே இனித்த நயத்தினையும்
அவரோடு களித்த போது
அவரது தலைசிறந்த படைப்பான
கவிதை நடந்து வந்தது
கையில் காப்பியோடு . . .

கமலஹாசனின் கவிதைகள்

மீண்டும் உனக்கொரு கடிதம்.

சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.
உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற
காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.
காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது.
பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும்இருக்க வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பதுஉண்மை.
ஆள் மாறினாலும்இல்லாள் மாறினாலும்
காதல்மாறுவதில்லை.
கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்
இருவேறு நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.
நமது ஆறாவது உணர்வைபோற்று.
பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்றஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து வருவதைஉணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து
கவிதையை வைக்கிறார்கள்.
நான் காதலன் கவிஞன் ஆதலால்
காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல்
விட்டிருப்பதுவிபத்தல்ல நீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே
யிருக்கிறாய் நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!
-கமல்ஹாசன்


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை
நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே
வெவ்வேறு பாதைகள்!அவற்றில்,
எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம்,
விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,
இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.


தமிழ் மகளுக்கு

தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாதிந்த சாதி ஜுரம்.
கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது
வியாதியில் வந்து முடிந்தது காண்

காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண்

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிர மாண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண்

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்
சாதியுஞ் சாமியும் சாராயம் போல்
சந்தைக் கடையில் விற்குது காண்

சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண்

புத்தன் சொன்ன தம்ம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண்

வாழ்க நற்றமிழர் . . .


user posted image
துணிக் கடைத் திறப்பு விழா. . .!
சிறப்பு விருந்தினர்
துணியே இல்லாத நடிகை !
திறப்பு விழா என்பதால்
அவர் வருகை திறந்த நெஞ்சோடு . . .
ஆராவது மூடு விழா
அழையுங்களேன் . . .!
இவர்கள் பேட்டி
மடைதிறந்த்துபோல் – இல்லை எனினும்
உடை திறந்த்துபோல் நிச்சயம் இருக்கும்.!
திறப்பு விழாவின் போது
ரிப்பன் வெட்டிய நடிகை கேட்டார்.
‘ரிப்பன் என்குத்தானே . . .!’
உங்களுக்குத்தான் மேம் !
நாளை உடை தைக்க
உபயோகப் படும் !
அன்று சாலையில் இயற்கை மாற்றம்.
புது ந்தி ஒன்று பிரவகித்த்து,
ஜொள் ந்தி . . .
வாழ்க ஜொள்ளர்கள் !
என்ன கூட்டம்
என ஒதுக்க வந்த டிராபிக் போலீஸ்
இரண்டாம் உயிர் எழுத்தை வாயில் திறக்க
நாலாம் உயிர் எழுத்து உள்ளே போய்ப் பறந்தது.!
நடுநாயகமாய் குத்துவிளக்கு. . .!
இலக்குமியைத் தீண்டிப் பழகியது அது
என்ன பாவம் செய்த்தோ இன்று,
உயிர் இருந்தால் தன்னைத்தானே
குத்திக் கொண்டிருக்கும். . .
அதனால்தான் குத்து விளக்கா ?
பேசாமல்
நடிகை வீட்டு நாயையும்
சட்டை அணிவித்து
திறப்பு விழாவுக்குக் கூப்பிட்டிருக்கலாம் . . .!
அதாவது கொஞ்சம் நாணப் பட்டிருக்கும்.
நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். . .!
நடிகைக்கு வேண்டுமாம் என
ஏன் சொல்லாது விட்டாய் பாரதீ . . .?
அந்தக் கூட்டத்தில் நல்லா டிரஸ் பண்ணி
போர்த்திக் கொண்டு வெட்கப் பட்ட சீவன்கள்
துணிக்கடைப் பொம்மைகள் மட்டுமே . . .!
திறந்த மனசோடு எல்லோர்க்கும்
திவ்ய தரிசனம்.
பேருந்துகள் கூட அன்று அங்கே நின்றே சென்றன.
user posted image
பேயாட பிசாசாட – நடன நிகழ்ச்சியில்
வாராவாரம் இரசித்த்து 2D – தரிசனம்.
இது 3 D – ஜென்ம சாபல்யம் !
மேம்மிடம் நிறையப்பேர் கைஎழுத்து வாங்கினர்.
சிலர் நெஞ்சில், சிலர் உள்ளங் கையில்,
சிலர் ரூபாய் நோட்டுக்களில் . . .
இவர்கள் கொஞ்சநாள் குளிக்க மாட்டார்கள்,
கழுவ மாட்டார்கள். . .
நாளை அந்த ரூபாய் நோட்டு
நல்ல ரேட்டுக்கு ஏராளமாய் ஏலம் போகும் . . .!
மேம்க்கு ரெம்ப ஆசை
தன் இரசிகர்கள்
தனக்குக் கோவில் கட்ட வேணும் என்று . . .
கோவிலில் கற்சிற்பம் இருக்கும்
அதை உறுதி செய்ய
நிறையப் பேர் மேம்மைத்
தொட்டு எல்லாம் பார்த்து
பிறவிப் பயனை அடைந்தார்கள் . . .!
அந்தக் காலத்தில் ஏதாவது மா நாய்க வணிகன்
பூம்புகாரில் உள்ள நாளங்காடிக் கடையைத்
தாசி அபரஞ்சியை வைத்துத்
திறந்திருப்பார் . . .!
இன்று இங்கே இவர்கள் இப்படி !
மனிதர்கள் மாறவே இல்லை !
நீதான் ஸாரதி ஆயிற்றே !
ஏ, வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா . . .!
இவர்களைப் பத்திக் கொண்டு போ கடல் வரை !
அங்கே தள்ளி மந்தார மலையைத் தூக்கி
அமுக்கி ஒரு கடை கடை !
இனியேனும் இப்படிஎல்லாம் திறவார் ஒரு கடை ! !

காதல் கவிதைகள் - 1

1 .அதிஷ்ட்டம்


அதிஷ்ட்டம்
இலாட்டரியில்
விழுந்தால்தான் என்றில்லை . . .

காற்றில் அலையும் நின்
கூந்தல் முடி ஒன்று
கையில் விழுந்தாலும்தான் . . .!

2.ஆதலால்


user posted image
நீ படித்துப்
பரிசு தந்த கவிதைப் புத்தகம்
ஏன் இனிக்கிறது விசேஷமாய் ?
புதுப் பிரதியின்
ஒட்டிய பக்கம் பிரிக்கப்
பனிமொழி நின்  வாய் ஈரம்
பட்டிருக்கும் ஆதலால் . . .!

3.சிரி

திங்கள் மல்லிச் சரம்
செவ்வாய் பிச்சிச் சரம்
புதன் முல்லைச் சரம் -

என ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பூச்சூடி வரும் பெண்ணே ?
இன்று புதன் . . .
வெறுந் தலையோடு வந்து விட்டாய்
ஏமாற்றி விட்டுப் போவாதே!
கொஞ்சம் சிரித்துவிட்டுப் போ !

4.யுரேகா . . . !

நீச்சல் குளத்தில்
அமிழ்ந்து குளித்த போது
உன்னால் இடம் பெயர்ந்த
நீரின் அளவு. . .

இரயில் நிலையத்தில்
எடை பார்க்கும் எந்திரத்தில் நின்ற போது
உன் எடை
சும்மா இராமல் இரண்டையும் வகுத்த போது
ஆச்சரியம்.
இதென்ன விடை 13.6 . . .?
இதுவா மனித உடலின் அடர்த்தி எண் என
ஆவலை அடக்க முடியாமல் புத்தகம் புரட்டினால்
அடர்த்தி எண் 13.6 க்கு நேரே
போட்டிருந்தது தங்கம் என . . .