Tuesday, January 19, 2010

பார்வைகள் பலவிதம்




ரெண்டு ஷூக்குள்ள எப்படித்தான் மூணு கால விட முடியுதோ?




அடேயப்பா முயற்சி திருவினையாக்குமா?




பெண் நாணல் போன்றவள் என்று சொல்வது உண்மைதான்..
எங்க இருந்து போட்டாலும் கரெக்டா போடுவோமுல




தலை சுத்துதுன்னு சொன்னா இதுதான் அர்த்தமா ?





மற்றவர்களோடு ஒத்து போவதில் பெண்களை மிஞ்ச முடியுமா?




எவ்வளவு பெரிய கை ..



என்னாது இது?? ..ஒரே குழப்பமா இருக்கே

எதிர்பாராத திருப்பம்

கழுத்தில் புது மஞ்சள் சரடு மின்ன ,கணவன் செந்திலோடு ஒட்டி நடந்தாள் சுந்தரி.நேற்றுதான் திருமணம் நடந்தது.ஈவின்ங் ஷோவிற்கு இரண்டு டிக்கெட்களை எடுத்துக்கொண்டு ,சுந்தரியை உரசியபடியே நடந்தான் செந்தில்.அவளுடைய சரிகை நெய்த அரக்கு கலர் சேலை அவனுடைய கைகளில் உரசி,அவனை கிறங்க வைத்தது.அவளிடமிருந்து வந்த மல்லிகை மணமும் , மஞ்சள் மணமும் அவனை மோகக்கடலில் மூழ்கச்செய்தன. வீட்டிலேயெ இருந்திருக்கலாமோ என்று அடிக்கடி அவனது உள்மனது கூறியது. சுந்தரியுடன் நடந்து செல்வதே அவனுக்கு சொர்க்கத்தில் நடப்பது போலிருந்தது.தியேட்டருக்குள் நுழைந்ததும் அவளின் மெல்லிய விரல்களோடு தன் கைகளை பிணைத்து கொண்டான்.சுந்தரி கைகளை வெட்கத்துடன் விடுவிக்க முயன்றாள்.உடனே கைகளின் இறுக்கத்தை அதிகபடுத்தினான் செந்தில்.சுந்தரியின் முகம் நாணத்தில் சிவந்து இருட்டில் கூட ஒளி காட்டியது.
                இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
திரைப்படம் ஓடுவதையே மறந்து இருவரும் ஒருவரையொருவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தப்பட்டனர்.பாடல் காட்சிகளின்போது அவளுடைய கைவிரல்களோடு நாட்டியமாடினான் செந்தில்.சுந்தரி வெட்கத்துடன் கையை விடுவித்துக்கொண்டாள்.
“ஏன்??”-செந்தில்.
“யாராவது பார்க்கபோறாங்க!”-சுந்தரி
“பார்க்கட்டுமே..அதுக்குத்தான் உன் கழுத்துல நான் கட்டின லைசென்ஸ் இருக்கே! “ - செந்தில்.
“அதுக்காக தியேட்டர்லயா?? “ - சுந்தரி.
“அப்போ வீட்டுல வச்சுக்கலாமா ! ம் சொல்லு “ என்று குறும்புடன் கேட்டான் செந்தில்.

கன்னம் சிவந்து நாணத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்தாள் சுந்தரி. பூக்களை வருடும் இளங்காற்றாக அவளுடைய தலையை கோதினான் செந்தில்.சின்ன சின்ன சீண்டல்களிலும் தீண்டல்களிலும் உலகை மறந்தனர்.படத்தின் கதை என்ன என்பது கூட அறியாமல்,திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.மூன்று மணிநேரம் மூன்று நொடிகளாய் மாறிப்போனதை நினைத்து இருவருமே வருந்தினர்.

“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.

ஆல் மச்சான்ஸ் அலர்ட்!

மின்னுறதெல்லாம் பொன்னல்ல… பண்ணுறதெல்லாம் லவ் இல்ல!
                                        Cats In Love
மாட்டிருச்சு ஃபிகருன்னு மயக்க பிஸ்கட் சாப்பிட்டு அலையாத. ‘நாங்க காதல்ல ஜெயிச்சு, வாழ்க்கையிலயும் ஜெயிச்சுக் காட்றோம்!’னு ‘பாய்ஸ்’ சித்தார்த் ஜெனிலியா மாதிரி டயலாக் விட்டா போதுமா? மொதல்ல லவ்ல ரீல் எது? ரியல் எதுன்னு தெரிஞ்சுக்கோ… உண்மையைப் படிச்சுப் புரிஞ்சுக்கோ!உஷாரா இருக்கணும்கிறதுதான் முதல் படி. ஒரு பார்வைக்கே, ஒன்பது பல்டி அடிக்கிறதை நிறுத்து. லேசா ஃபிகரு தலையைச் சாய்ச்சுப் பார்த்தா, பாஸாகிட்டோம்னு டூயட்டுக்குக் கிளம்பிராத. போற போக்குல ஒரு லுக் விட்டதுக்கே, ஆரார் வாசிக்க ஏ.ஆரைத் தேடுற பாரு… அங்கதான் ஆரம்பிக்குது அல்வா வரலாறு. அவ பார்க்கும்போது, லேசா புருவத்தை டான்ஸ் ஆட விட்டுட்டாள்னா, போச்சு… காதல்னே கன்ஃபார்ம் பண்ணிருவல்ல… வேணாம்டா. ஏன்னா, பொண்ணுங்க பார்வைங்கிறது புயல் பூமியில ஹெலிகாப்டர்ல சாப்பாடுப் பொட்டலம் போடுற மாதிரி. வாழ்க்கைக்குத் தேறாது! எடுத்ததுக்கெல்லாம் பன்ச் டயலாக் அடிக்கிறானா அவன்? ஒரு வாரத்துலயே ‘நீ இல்லைன்னா, நான் செத்துருவேன்’ங்கிறது, ‘எப்போ உன்னைப் பார்த்தேனோ, அப்பவே உன்னோட வாழ ஆரம்பிச்சுட்டேன், நமக்கு இப்போ ஒரு குட்டிப் பாப்பா இருக்கு தெரியுமா?’ங்கிறவனையெல்லாம் நம்பவே கூடாது. எடுத்ததுமே, சம் டெக்ஸ்ட் மிஸ்ஸிங்னு எட்டுத்துண்டா மெசேஜ் அனுப்பறது, ‘இதான் நீ… இதான் நான்!’னு முத்தம் குடுக்குற முயல் குட்டிங்க பிக்சர் மெசேஜ் அனுப்புற எமோஷனல் பார்ட்டிகளைக் கொஞ்சம் வெயிட்டிங்லயே வெச்சிருக்கிறது நல்லது!சினிமா கிறுக்குல ஃபீலிங் ஃபிலிம் காட்றவங்ககிட்ட அலர்ட்டா இருக்கணும். ‘அலை பாயுதே’ பார்த்த அன்னிக்கே, ‘வா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்!’னு துப்பட்டாவைப் பிடிச்சு இழுப்பான். ‘7 ஜி’ பார்த்துட்டு, ‘ஒரு தடவை உன்னை எனக்கு முழுசா தந்துடுறியா?’ன்னு கேட்பான். ‘கற்றது தமிழ்’ பார்த்துட்டு, ‘நிஜமாத்தான் சொல்றியா?’னு திரியுற பில்ட்அப் ஃபீலர்களை நல்லா வாட்ச் பண்ணியே ஆகணும்!
எப்போ பார்த்தாலும், ‘இப்போதான் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். பிரசாதம் எடுத்துக்க. உனக்கு கோல்ட் சரியாகணும்னு வேண்டிக்கிட்டேன். காலையில அம்மாவுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணேம்ப்பா. இட்லி எடுத்தப்போ கை சுட்ருச்சு. தாத்தாவுக்கு பவர் செக் பண்ணி கிளாஸ் வாங்கிட்டுப் போகணும்ப்பா. தம்பியை நினைச்சா கவலையா இருக்கு. அன்னிக்கு வீட்டுக்கு வந்தான். ஒரே சிகரெட் ஸ்மெல். மூணாறுல இருந்து எங்க ஆன்ட்டி வந்திருக்காங்க. நைட் அவங்களுக்கு கீதை படிச்சுக் காமிச்சுட்டு இருந்தேனா. ரொம்ப லேட் ஆகிடுச்சு’ன்னு மானாவாரியா ஓவர் டோஸ் ஹோம்லி ஷோ ஓட்டினா, நம்பிடாத. அதுக்கு ஒரு பயங்கரமான ‘பாட்ஷா’ முகமும் இருக்கும். எங்கேயாவது பர்த் டே பார்ட்டியில ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து, உன் ஆளு தம்மைப் போட்டு டான்ஸ் பண்றதைப் பார்த்தா தெரியும்டி!
பக்கத்துல நீ இருக்கும்போது, பர்ஸைத் திறந்து நாலஞ்சு கிரெடிட் கார்டுகளைச் சும்மாவே எடுத்து வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பான். (அம்புட்டும் கேன்சலானதா இருக்கும்). கொஞ்சம் தள்ளி நின்னு சத்தமா, ‘உன் ஃபீல் புரியுது திவ்யா. பட்… எனக்கு வரலியே. அதுவா தோணணும். நமக்குன்னு ஒருத்தி இவதான்னு தோணணும். இதுவரைக்கும் தோணலிலயே!’னு மொபைல்ல பேசுவான் (அந்தப் பக்கம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கிற போன் ஃப்ரெண்ட் கொலை வெறி டென்ஷன் ஆவான்). ஓட்டலுக்கு அழைச்சுட்டுப் போய், ‘எனக்கு வரப்போற ஒய்ஃபுக்காக ஒரு பீச் ஹவுஸ் கட்டணும். ரெண்டு பேரும் ஈவினிங் பீச்ல கை கோத்து நடக்கணும். குட்டியா ஒரு கார். மாசத்துக்கு ஒரு அவுட்டிங். பிறக்கப் போற குழந்தைக்கு, அவங்க தாத்தா பாட்டியோட பேரு. இப்படி எனக்கும் ஆசைகள் இருக்கு!’ன்னு உன் கண்ணைப் பார்த்துக்கிட்டே நான்ஸ்டாப்பா ஃபீல் பண்றானா? அந்த ட்ரீமிங் தலையனுங்க சகவாசமே வேணாம்!
‘ப்ராமிஸா இனி தண்ணியே அடிக்க மாட்டேன். உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு பூஜா!’ன்னு தண்ணி அடிச்சுட்டு போன் பண்ணுறானா? பக்கத்துல நீ இருக்கும்போது, எதிர்க்க கலர் கலரா ஃபிகர்ஸ் வந்தா, யு டர்ன் போட்டு மரத்தை வெறிக்கிறானா? கிராஸ் பண்ணும்போது, சிகரெட்டைக் கீழே போட்டு மிதிச்சுட்டு, ‘ச்சே இந்த சனியனை இனிமே பிடிக்கவே கூடாது’னு சத்தமாச் சொல்றானா? ‘ஸாரி, நேத்து ஜுவாலஜி கிளாஸ்ல தலைவலிக்குதுன்னு தூங்கிட்டேன். நோட்ஸ் தர முடியுமா?’னு ஏதாச்சும் கேட்கிறானா? பஸ்ல டிக்கெட் பாஸிங்குக்கு எகிறி எகிறி ஹெல்ப் பண்றது, கூட நடக்கும்போது, பிச்சைக்காரருக்கு டென் ருபீஸ் போடுறது, வயசானவங்களைத் தரதரன்னு இழுத்து ரோடு கிராஸ் பண்ணிவிடுறதுனு சமூக சேவை பில்ட்அப்பா கொடுக்கிறானா? இதெல்லாம் இவன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல இருக்கே என நம்பவைக்க பையன் போடுற காதல் டிராமா. கவனமா இருக்கணும் கண்ணு!

எனக்கு பிடித்த குட்டி கதைகள் - 3

ஆ...

மீண்டும் மீண்டும்
“ஆ....அம்மா”
அவன் மீது பைக் விழுந்து கிடந்தது.இடதுகை எலும்பு முறிந்து ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.ரத்த போக்கு அதிகம் என்பதால் மெல்ல அவன் சுயநினைவுகளை இழந்து கொண்டிருந்தான்.அவனுக்கு அதிகபட்சம் இருபது வயதிருக்கலாம்.போட்டிருந்த தங்க பிரேஸ்லெட்டும் கழுத்து ஒட்டிய மைனர் செயினும் அவனை நடுத்தரக் குடும்பத்திற்கும் மேலே என காட்டியது.
அலரல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டின் வேலைக்காரன் ஓடி வந்தான்.
“இந்த காலத்து பையன்களுக்கு பைக் ஓட்டினா கண்ணு மண்ணு தெரியரதேயில்ல”, அந்த நிலையிலும் இளைஞனை திட்டிக் கொண்டே உதவிக்கு சிலரை அழைத்தான்.ஆட்டோ மூலம் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு அவனுக்கு நினைவு திரும்பியதும் அவனுடைய வீட்டிற்கும் தகவல் அனுப்ப பட்டது.
மூன்று மாதங்கள் கழித்து...
“பைக் எடுத்துக் கிட்டு போரதா இருந்தா கவணமா போ. முன்னாடி நடந்த சம்பவத்த நினைவுல வைச்சுக்கோ”, அப்பாவின் அட்வைஸ் மழையில் அவன் நனைந்து கொண்டிருக்கும் போதே அம்மா குறுக்கிட்டாள்.
“பையன் பிழைச்சு வந்ததே பெருமால் புண்ணியமுன்னு, நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கிட்டு இருக்கேன்.நீங்க என்னாடானா அவனை எப்ப்பார்த்தாலும் கரிச்சு கொட்டிக் கிட்டு இருக்கீங்க.”
“பையன் புது பைக் ஓட்டரத பார்த்து யார் யாரெல்லாம் பொறாமை பட்டாங்களோ, நீ இப்படி திரும்புடா” கையிலிருந்ததினை கொண்டு அவனுக்கு திருஷ்டி சுற்றினாள்.
“அம்மா, என்னாம்மா இதெல்லாம், இப்ப எதுக்கு தேவையில்லாம“
“அவ சொன்னா கேட்கமாட்டா டா”
“பொறுப்புள்ள அப்பா மாதிரி என்னைக்காவுது பேசறிங்களா”, அம்மா சலித்துக் கொண்டாள். அப்பா அவரின் அறைக்குச் சென்றார்.
சிறிது நேரத்தில் அந்த பெரிய வீட்டின் வாசல் முன்பு பூசணிக்காய் சிதறிக்கிடந்தது.
(கதையை முதலிலிருந்து படிக்கவும்).