Monday, January 4, 2010

டி.ராஜேந்தரை என்ன சொல்லித் திட்டியிருப்பார்கள்?


சி்ன்னசேலம் ரயில் நிலையத்தில் மனைவி உஷாவை ரயிலில் அனுப்புவதற்காக சென்றபோது லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தரை திட்டி மிரட்டிய தேமுதிகவைச் சேர்ந்த 6பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷாவை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தார்.


இதற்காக சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார்.பிளாட்பாரத்தில் நடந்து போன போது, திடீரென அங்கு வந்த சின்னசேலம் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, குமார், கோபிநாத், சூரியன், தாமோதரன், அறிவழகன் உள்ளிட்டோர் சரமாரியாக ராஜேந்தரைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேந்தர் சின்னசேலம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது, குப்புசாமி மகன் சின்னசாமி, சின்னசேலம் பாண்டியன் மகன் குமார், சின்னப்பன் மகன் கோபிநாத், துரைசாமி மகன் சூரியன், அங்கமுத்து மகன் தாமோதரன், கோவிந்தன் மகன் அறிவழகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

2 comments:

  1. டி ராஜேந்தர் போட்டோவ என்னோட பதிவுல பயன்படுத்திக்கிறேன் பாஸ்!

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!