Wednesday, February 10, 2010

காதலர் தின சிறப்பு கவிதைகள் - 2


கல்யாணம் செய்ய

உன் தோழியின்


கல்யாணவீட்டில்


தாலிகட்ட உதவிசெய்த


உன்னைப்


பார்த்தபின் தான்


எனக்கும் ஆசை வந்தது


தாலிகட்டி கல்யாணம் செய்ய...!


-யாழ்_அகத்தியன்


வாய் ஓயாமல் பேசும் பெண்கள்


வாயாடி என்றால் ….


நீ கண்ணாடி !!!


எனக்கு பேராசையெல்லாம்


எதுவும் கிடையாது


உன் பெயருக்கு பின்னே


என் பெயர் வரவேண்டுமென்கிற


பெயராசைதான் உண்டு !


-ஷிப்லி




அன்பே உன் மனதில்

நான் இல்லை என்றாய்
துடித்துப் போனேன் !

பின்பு

உனக்கு மனசே இல்லை
என்று தெரிந்து
ஆறுதல் அடைந்தேன் !


உன்னுடன் நான் கழித்த

நொடிகளைத்தான்

உருக்கி வார்த்து

உலகம் கொண்டாடுகிறது

காதலர் தினமென...


வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!