Thursday, February 11, 2010

கொஞ்சம் காதலித்து பார்



முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா?
அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ?
அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ?
அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ?
இரவு முழுக்க உனக்காக அசைன்மென்ட் எழுதி தர அவள் எழுத்து அழகுக்காகவே அதை தராமல் வகுப்பில் திட்டு வாங்கியது உண்டா ?
”இன்னைக்கு நான் தான் செஞ்ச” என்றதும் யாருக்கும் தராமல் அவளின் டிபன் பாக்ஸ் முழுக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டதுண்டா?
காதலை மானசீகமாய் நட்பாக்க முயன்றதுண்டா?
நட்பான காதலை மறைக்க முயன்று அவளிடம் கையும் களவுமாக சிக்கியது உண்டா ?

ஒரு மாதம் கழித்து ” நானும் உன்ன லவ் பண்றனு நினைக்கற ” என அவள் சொல்ல ஜனரஞ்சகமாக வெட்கம் பழகியதுண்டா?
கல்லுரியின் இறுதி நாளில் தோள் சாய்த்து அவள் அழுதது உண்டா?
கல்லூரி முடித்து இருவரும் வேறு வேறு திசையில் பயணித்தது உண்டா?
சொந்த ஊரில் வேலை செய்யும் சௌரியங்களை விட்டு விட்டு உனக்காக மாற்றலாகி வந்ததுண்டா ?
இரவு முழுதும் அவள் கை பிடித்து கடற்கரையில் நடை பழகியது உண்டா ?
உன் பிறந்த நாளுக்காக அநாதை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து அந்த புகை படத்தை உன்னிடம் காட்டி உன்னிடம் முத்த பரிசு பெற்றதுண்டா ?
திடிரென உனக்கு வெளியூர் மாற்றலாக அழுது வீங்கிய கண்களோடு ரயில் பெட்டி மறையும் வரை கையசைத்தபடியே உன்னை வழியனுப்பியதுண்டா ?
பயணம் முடியும் முன்பாக 164 முறை அழைப்பு விடுத்தது காதலால் உன்னை திணறிபோக செய்ததுண்டா?
திடிரென அவளை பெண் பார்க்க வந்ததும், அதற்கு பின் நடந்தவைகளை அவள் விவரிக்க மூர்ச்சையடைந்து போனதுண்டா?

பெற்றோர் சம்மதிக்காத நிலையில் கூட வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் என்ன சந்தோசமா வெட்சுப்பனு நம்பிக்கை எனக்கு இருக்கு டா என்று உஙகளிடம் உளறியதுண்டா?
அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா ?
காதல் விவகாரம் அவள் வீட்டில் தெரிந்து அவளை அடித்து துன்புறுதுகையில் அலைபேசியில் சப்தம் கேட்டு துடி துடித்ததுண்டா?
”இனி மேல் அவள மறந்தர சொன்னா” என்று அவள் அறை தோழி சொல்ல சொல்ல உலகமே இருண்டு போனதுண்டா ?

நாளை அவளுக்கு திருமணம் என்ற நிலையில் அந்த நாளே நினைவில்லாமல் போகும் அளவு குடித்து குடித்து தனிமை வெரித்ததுண்டா ?
போதையில் கூட அவளுக்கு பிடித்த நாய் குட்டி அவள் கணவன் வீட்டில் வளர்க்க உரிமை உண்டா என்று பிதற்றியபடி மயக்கமடைந்தது உண்டா ?பல முறை கேட்டு விட்ட நண்பர்களுக்காக அவளை மறந்து விட்டதாக பொய் சொல்லி ஒரு மணி நேரத்தில் ஒரு முறையாவது அவள் நினைவுகளை கடந்து வருவதுண்டா ?

இல்லை என்றால் கொஞ்சம் காதலித்து பார்.

நன்றி : அடலேறு

http://adaleru.wordpress.com/2009/09/26/kadhlithu-paar/

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!