Tuesday, February 16, 2010

சிதறல்கள்

பாதசாரிகள் கவனத்திற்கு 
கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம் ஓடி ஓடிக் கலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அனாதை  நாய்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே !!!

திருடர்கள் ஜாக்கிரதை
சொக்க தங்கம் நூறுபவுன் நகை
ரொக்க பணம் ஐம்பதாயிரம்
ஸ்கூட்டர் டிவி என

பட்டியலிடும் போதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்
ஆனால்....
கதவு திறக்கும் பொழுதே
கண்டு கொண்டோ குரைத்தது
என வீட்டு நாய்.

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!