Thursday, June 3, 2010

படித்ததில் பிடித்தது

நானும் நீயும்
The-Couple-1.jpg
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்கு பின்னால்
நின்று கொண்டு இருப்பாய் நீ
உன் இனத்துக் கற்ப்புகரசிகளை சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோகியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ
நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லி கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ
எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்கு பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை 
நன்றி : ஜெயபாஸ்கரன் அவர்களின் கவிதை. (விகடனில் வெளிவந்தது).
பின் குறிப்பு :கவிதைக்கு மாற்று கருத்து இருப்பவர்கள் இருப்பின் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

கவனம்
  conductor_rupee_fan.jpg
 நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி..


நன்றி :  சே. சதாசிவம்  {விகடனில் வெளிவந்தது}

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!