Friday, September 10, 2010

அனுபவக் குறிப்பு

அழும் குழந்தையும் நானும் 
சில சமயம் மளிகை கடைகளில்,
சில்லறை  தட்டுப்பாடு
காரணமாக கிடைக்கும்
ஐம்பது பைசா மிட்டாய்களை,
எங்காவது தெருவோரங்களில்
எதற்காகவோ, காரணமே இல்லாமல்
அழும் குழந்தைக்கு
கொடுக்க நினைப்பேன்.


1874253879_cf2e15d475.jpg

அதற்குள்  எனக்குள் இருக்கும்
குழந்தை அழுது விடுவதால்
அதற்கே கொடுத்து விடுவேன்..!
சிறிது நேரத்தில் அழும்
அக்குழந்தைகளை  காணும் போது,
அழுகைக்கான காரணத்தை புரிந்தவனாய்,
அங்கிருந்து நகர்வேன்
கணிப்பொறியை நோக்கி
அனுபவக் குறிப்பு
டைப்புவதற்க்கு........!

வழக்கம் போல இப்பவே சொல்லிட்டேன் இது கவிதை கிடையாது.

1 comment:

  1. வடிவேலுவே பரவாயில்லை போலிருக்கு.. :)

    [என்ன இது சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு.... (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)]

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!