Wednesday, January 20, 2010

காதல் கவிதைகள் - 1

1 .அதிஷ்ட்டம்


அதிஷ்ட்டம்
இலாட்டரியில்
விழுந்தால்தான் என்றில்லை . . .

காற்றில் அலையும் நின்
கூந்தல் முடி ஒன்று
கையில் விழுந்தாலும்தான் . . .!

2.ஆதலால்


user posted image
நீ படித்துப்
பரிசு தந்த கவிதைப் புத்தகம்
ஏன் இனிக்கிறது விசேஷமாய் ?
புதுப் பிரதியின்
ஒட்டிய பக்கம் பிரிக்கப்
பனிமொழி நின்  வாய் ஈரம்
பட்டிருக்கும் ஆதலால் . . .!

3.சிரி

திங்கள் மல்லிச் சரம்
செவ்வாய் பிச்சிச் சரம்
புதன் முல்லைச் சரம் -

என ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பூச்சூடி வரும் பெண்ணே ?
இன்று புதன் . . .
வெறுந் தலையோடு வந்து விட்டாய்
ஏமாற்றி விட்டுப் போவாதே!
கொஞ்சம் சிரித்துவிட்டுப் போ !

4.யுரேகா . . . !

நீச்சல் குளத்தில்
அமிழ்ந்து குளித்த போது
உன்னால் இடம் பெயர்ந்த
நீரின் அளவு. . .

இரயில் நிலையத்தில்
எடை பார்க்கும் எந்திரத்தில் நின்ற போது
உன் எடை
சும்மா இராமல் இரண்டையும் வகுத்த போது
ஆச்சரியம்.
இதென்ன விடை 13.6 . . .?
இதுவா மனித உடலின் அடர்த்தி எண் என
ஆவலை அடக்க முடியாமல் புத்தகம் புரட்டினால்
அடர்த்தி எண் 13.6 க்கு நேரே
போட்டிருந்தது தங்கம் என . . .

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!