Saturday, January 2, 2010

கல்லறை வரிகள்

விலைமகளிர் கல்லறைகள்
*
கல்லறை ஒன்று-

படுப்பதை நினைக்கவே
பயமாகவும் அருவருப்பாகவும்
இவள் உணர்ந்ததால்
இவளின் விருப்பப்படியே
நிற்கும் நிலையிலேயே
புதைக்கப் பட்டிருக்கிறாள்.
*
கல்லறை இரண்டு-

இட நெருக்கடி காரணமாக
நாம் நிறைவேற்றாது விட்ட
இவளின் கடைசி ஆசை-
" என்னுடன் படுக்கையை
பங்கு போட்டவர்களையும்
சேர்த்தே புதைத்து விடுங்கள்"
*
கல்லறை மூன்று-

"தயவு செய்து என்னை
குப்புற புதைத்து விடுங்கள்"

1 comment:

  1. padithavudun mei silirtha kavithai...paratukal...

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!